இளங்கலை பட்டம் பெற்ற அவர், 1996இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெள்ளக்கோவில் தொகுதியில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் முன்னாள் அமைச்சர் துரை. ராமசாமியை தோற்கடித்து அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். அவருக்கு திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
ஜெயலலிதா 1991-ம் ஆண்டு முதல்முறையாக முதலமைச்சர் பதவியேற்ற போது அவரை வெற்றி பெற வைத்த தொகுதி என்பதால் காங்கேயம் எப்போதுமே அதிமுகவுக்கு ஸ்பெஷல் தான். திமுக வேட்பாளர் ராஜ்குமார் மன்றாடியாரை வீழ்த்தி ஜெயலலிதா வெற்றி பெற்றார். தொடக்கத்தில் காங்கிரஸ் கோட்டையாக இருந்த காங்கேயம் பின்னர் அதிமுகவின் கோட்டையாக மாறியது.
இந்நிலையில் அதனை திமுகவின் கோட்டையாக மாற்ற பம்பரமாக சுழன்று வருகிறார் முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன். தனது சொந்த கிராமமான முத்தூரை உள்ளடக்கிய காங்கேயம் தொகுதிக்குள் மட்டும், கொரோனா கால நிவாரணமாக இதுவரை 92,700 பேருக்கு தலா 5 கிலோ அரிசி பை வழங்கியுள்ளார் சாமிநாதன்.
சென்னிமலை, குண்டடம், காங்கேயம், வெள்ளக்கோவில் என அனைத்து ஒன்றியங்களிலும் வீடு தவறாமல் அரிசி பைகளை விநியோகித்து வரும் வெள்ளக்கோவில் சாமிநாதன், இதுவரை நிவாரணப் பணிகளுக்காக மட்டும் தனது சொந்த நிதியில் இருந்து ஒன்றே 2 கோடி ரூபாய் செலவழித்துள்ளாராம்.
வெள்ளக்கோவில் சாமிநாதன் களத்திற்கு வரமாட்டார், மக்களை சந்திக்க மாட்டார் என தன்னை பற்றி கட்டமைக்கப்பட்ட பிம்பத்தை சுக்கு நூறாக உடைத்தெறிந்து தனது எதிர்க்கோஷ்டியினருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். ஒன்றியம் வாரியாக கிராமம் கிராமமாக நிவாரணப் பொருட்களை இவரே நேரில் சென்று வழங்குவதுடன் பொதுமக்களிடம் பெற்ற புகார் மனுக்களை மாவட்ட ஆட்சியருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
ஓய்வறியா சூரியன் போல் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் வழிகாட்டுதலின் பெயரில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தொகுதி அதிமுக, அதன்பின் காங்கிரஸ் செல்வாக்கு பெற்று இருந்ததை மாற்றி, அதை திமுக கோட்டையாக மாற்றி காட்டினார் வெள்ளக்கோவில் சாமிநாதன். தமிழக அமைச்சரவையில் உள்ள அனைத்து துறைகளின் செயல்பாடுகளையும் திட்டங்களையும் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்றால் அது செய்தித்துறை மூலமாகவே முடியும் என்பதை உணர்ந்த திமுக தலைவர் முதல்வர் மு.க ஸ்டாலின் இந்த துறைக்கு சரியான நபர் சாமிநாதன் தான் என முடிவு செய்ததாக அறிவாலயம் மூத்த நிர்வாகிகள் வட்டாரத்தில் பேசப்படுகிறது. செய்தித்துறையிலும் ஒரு சாதனை படைப்பார் சாமிநாதன் என்கிறார்கள் விசயம் அறிந்தவர்கள்.

