தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமையிலான கண்காணிப்பு குழு ஆலையின் மெட்டீரியல் கேட் வழியாக ஆய்வு மேற்கொண்டனர்.
தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அப்போது, மத்திய அரசு வழக்கறிஞர் ஆக்சிஜன் உற்பத்திக்காக அனுமதிக்கலாம் என கூறியிருந்தார். இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
இதைதொடர்ந்து, ஆக்ஸிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் யோசனை வழங்கியது. இதனைதொடர்ந்து, அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தற்காலிக 4 மாதங்களுக்கு மட்டும் தமிழக அரசு அனுமதி வழங்கியது.
அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுத்து 5 தீர்மானங்கள் குறித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பத்திர தாக்கல் செய்தது. இதைத்தொடர்ந்து, ஆக்சிஜன் தயாரிக்க ஆலையை திறக்க வேந்தாந்தா நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. பின்னர், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க 5 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில், தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமையிலான குழு ஆலையின் மெட்டீரியல் கேட் வழியாக ஆய்வு மேற்கொண்டனர். இந்த கண்காணிப்பு குழுவில் இடம்பெற்றுள்ள தூத்துக்குடி எஸ்.பி.ஜெயக்குமார், உதவி பேராசிரியர் கனகவேல், ஓய்வு பெற்ற அதிகாரி அமர்நாத், தூத்துக்குடி அனல்மின் நிலைய அதிகாரி பெல்லார்மின் உள்ளிட்டோர் கொண்ட குழு இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டனர்
உச்சநீதிமன்றம் உத்தரவின்படி ஸ்டெர்லைட் நிறுவனம் ஆக்சிசன் தயாரிப்பதற்கு தேவையான அனைத்து அடிப்படை பணிகளை செய்து முடித்து விட்டனர்
சுற்றுச்சூழல் அதிகாரிகளின் ஆய்வுகளும் நடந்து முடிந்த நிலையில் தமிழ்நாடு மின்சார துறை சார்பாக மின்சார இணைப்பு மட்டும் இன்னும் வழங்காத சூழ்நிலையில் ஏன் இந்த கால தாமதம் என பல்வேறு அமைப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்து வரும் நிலையில்
கண்காணிப்பு குழுவினர் இன்று ஆய்வு செய்தது விரைவில் ஆலை துவங்குவதற்கான ஏற்பாடுகளுக்கு காரணமாக இருக்க கூடும் எனவும் பேசப்படுகிறது பேசப்படுகிறது
ஆக்சிஜன் பற்றாக்குறையால் இந்தியாவில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் ஆக்சிசன் தயாரிப்பதற்கு தயாராக ஆலை நிர்வாகம் இருந்துவரும் நிலையில் மின் இணைப்பு வழங்குவதில் காலதாமதம் ஏன் என பல்வேறு கேள்விகள் எழுந்து வருகிறது இதற்கு உடனே தீர்வு காண வேண்டும் என பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
மதுரையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க ஐநாக்ஸ், இஸ்ரோ, ஸ்டெர்லைட்டிடம் உதவிகோரியுள்ளோம் என்று மதுரை ஆட்சியர் கூறியுள்ளார். கேரளாவிலிருந்து மதுரைக்கு வந்து கொண்டிருந்த ஆக்சிஜன் தற்போது வரவில்லை என் அவர் தெரிவித்துள்ளார்
இவ்வாறு ஆக்சிசன் தேவைகள் அதிகரித்து வரும் நிலையில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ஆக்சிசன் உற்பத்திக்கு தயாராக இருந்து வரும் நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியம் இந்த ஆலைக்கு மின் இணைப்பு கொடுப்பதற்கு கால தாமதம் ஆகி வருவது ஏன் என்ற கேள்வி தற்போது எழுந்து வருகிறது.


