கயத்தாறு அருகே கோயில் கொடை விழாவில் ஏற்பட்ட தகராறில் 4 பேரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே பன்னீர்குளம் கிராமத்தில் கயத்தாறு அருகே பன்னீர்குளம் கிராமத்தில் ஒரே சமுதாயத்திற்க்கு பாத்தியப்பட்ட கருப்பசாமி கோயில் கொடை விழா நடந்தது. மதியகொடை முடித்து விழா கமியிட்டினர் மாலையில் வரி தொடர்பாக கோயில் முன்பு அமர்ந்து பேசிக் கொண்டிந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென வந்து மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரிமாரி வெட்டினர்.
இதில் பன்னீர் குளத்தை சேர்ந்த சண்முகையா மகன் உலகைய்யா (30), ராமையா மகன் கருப்பசாமி (58), மாடசாமி மகன் தங்கதுரை (30) மற்றும் மலையாண்டி மகன் ராமகிருஷ்ணன் (40) ஆகியோருக்கு கை மற்றும் தலையில் காயம் ஏற்பட்டது. தகவலறிந்து இன்ஸ்பெக்டர் மணிவண்னன், சப்-இன்ஸ்பெக்டர் அரிக்கண்ணன், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்க்கு சென்று விசாரணை நடத்தி காயம் அடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.

