ATM இயந்திரத்தில் முன்னதாக எடுக்காமல் விட்டுச் சென்றவரின் பணத்தை, அடுத்ததாக வந்தவர் ATM இயந்திரத்திலிருந்த பணத்தை எடுத்து மனித நேயத்துடன் உரியவரிடம் ஒப்படைத்தவரின் நேர்மையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் சால்வை அணிவித்து பரிசு வழங்கி பாராட்டினார்.
தூத்துக்குடி மாவட்டம், தபால் தந்தி காலனியைச் சேர்ந்த குலசேகரமோகன் என்பவர் கடந்த 20.04.2021 அன்று மாலை ஆசிரியர் காலனி பகுதியில் உள்ள SBI ATM ல் பணம் எடுக்க சென்ற போது அந்த ATM இயந்திரத்தில் பணம் ரூபாய் 5000/- ஏற்கனவே இருந்துள்ளது. பின்னர் அந்த பணத்தை எடுத்த குலசேகரமோகன் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்ததில் பணத்தை முன்னதாக ATM இயந்திரத்தில் எடுத்த உரிமையாளர் விபரம் கிடைக்கவில்லை. இதனையடுத்து கடந்த 22.04.2021 அன்று தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபி மேற்படி நடந்த சம்பவத்தை தெரிவித்து உரியவரை கண்டுபிடித்து அவரிடம் பணத்தை ஒப்படைக்குமாறு குலசேகரமோகன் கேட்டுக்கொண்டார்.
இதுகுறித்து சைபர் குற்ற பிரிவு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மேற்படி பணத்தை எடுக்காமல் சென்றவர் தூத்துக்குடி அசோக்நகர் பகுதியைச் சேர்ந்த இயுசேபீயுஸ் என்பதும் அவர் ATM இயந்திரத்தில் பணப்பரிவர்த்தனை செய்தபோது பணம் வரவில்லையென்று சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்திற்கு இயுசேபீயுஸை வரவழைத்து, மேற்படி பணம் ரூபாய் 5000/-த்தை குலசேகரமோகன் என்பவரே மாவட்ட காவல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் ஒப்படைத்தார்.
பணத்தை எடுத்து மனித நேயத்துடன் உரியவரிடம் ஒப்படைத்த நேர்மையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் குலசேகரமோகனுக்கு சால்வை அணிவித்து பரிசு வழங்கி பாராட்டினார்.


