தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய 57பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இந்நிலையில் ஆலையை திறக்க எதிர்ப்புத் தெரிவித்து பண்டாரம்பட்டியில் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக சிப்காட் சப் இன்ஸ்பெக்டர் சங்கர் அளித்த புகாரின் பேரில், மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 37பேர் மீது இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப் பதிவு செய்துள்ளாார்.
அவர்கள் மீது 143, 269, 270, மற்றும் கோவிட் 19 தொற்று நோயை பரப்புதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோல் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கூடாது என வலியுறுத்தி தூத்துக்குடி மட்டக்கடை புதுத் தெருவில் போராட்டம் நடத்திய 20 பேர் மீது வடபாகம் சப் ஆர்தர் ஜஸ்டின் சாமுவேல் ராஜ் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அருள் வழக்குப் பதிவு செய்துள்ளார்.

