கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 24ம்தேதி அதிகாலை இறந்த அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு தலைமைக்காவலர் மகராஜனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் இன்று காலை அண்ணா நகர் காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமைக் காவலர் மகராஜனின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
உடன் கூடுதல் போலீஸ் கமிஷ்னர்கள் , இணை கமிஷ்னர்கள் , துணை கமிஷ்னர்கள் காவல் அதிகாரிகள் மற்றும் மகராஜன் அவரின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.



