• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

policeseithitv by policeseithitv
April 22, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
காவல் நிலையம் முன்பு வெடிகுண்டு வீசிய 6 பேர் மீது குண்டர் சட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் குறுக்குசாலை சிந்தலக்கட்டை முருகையா நகர் பகுதியை சேர்ந்த மாடசாமி மகன் சேகர் (எ) கொம்பன் (55) என்பவர் கடந்த 22.03.2021 அன்று சொத்து பிரச்சினை காரணமாக அவருடைய சகோதரரான சின்னதுரை மனைவி ராமலெட்சுமி (40) என்பவரை அரிவாளால் தாக்கி கொலை செய்துள்ளார். இதுகுறித்து ஓட்டப்பிடாரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சேகர் (எ) கொம்பன் என்பவரை கைது செய்தனர்.
தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பாலதண்டாயுத நகரை சேர்ந்த சண்முகம் மகன் அஜய் (எ) மாடசாமி (40) மற்றும் லெட்சுமணன் மகன் சண்முக விக்னேஷ் (எ) விக்னேஷ் (23) ஆகியோர் கடந்த 31.03.2021 அன்று 1ம் கேட் காந்தி சிலை அருகே வந்துகொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தராததால் அரிவாளால் தாக்க முயன்று கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார்  வழக்கு பதிவு செய்து அஜய் (எ) அஜய் மாடசாமி மற்றும் சண்முக விக்னேஷ் (எ) விக்னேஷ் ஆகியோரை கைது செய்தனர்.
தூத்துக்குடி ஆனந்தா நகரை சேர்ந்த  சாந்தகுமார் மகன் அப்பு (எ) அப்பன்ராஜ் (31) என்பவர் கடந்த 23.03.2021 அன்று டேவிஸ்புரம் பகுதியில் வந்துகொண்டிருந்த ஓருவரை வழிமறித்து அரிவாளை காட்டி பணம் பறித்துள்ளார். இதுகுறித்து தாளமுத்து நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பன்ராஜை கைது செய்தனர்.
மேற்கண்ட வழக்குகளின் முக்கிய எதிரிகளான சேகர் (எ) கொம்பன், அஜய் (எ) மாடசாமி, சண்முக விக்னேஷ் (எ) விக்னேஷ், அப்பு (எ) அப்பன்ராஜ் ஆகிய 4பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் 4பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் கி. செந்தில் ராஜ் உத்தரவிட்டார். ஆட்சியர் உத்தரவின் பேரில் 4பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் பாளையங்கோட்டை சிறையிலடைக்கப்பட்டனர்.
Previous Post

தூத்துக்குடியில் ரூ.1,500 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பிடிபட்டது குறித்து வருவாய் புலனாய்வுத் துறை விசாரணை

Next Post

ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

Next Post
சமுக நலனில் தனி அக்கறை செலுத்தும் வேதாந்தா குழுமம்  பெருகி வரும் பொதுமக்கள் ஆதரவு!!

ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In