சென்னை பெருநகர காவல் நிலைய சரகத்தில் நடைபெறும் குற்றங்களை தடுக்க வேண்டி
இரவு ரோந்து காவலர்களை அதிகப்படுத்தியும் வாகன தணிக்கையை தீவிரபடுத்தவும் பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளதை பின்பற்றி சென்னை தெற்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷ்னர் கண்ணன் தெற்கு மண்டல இணை கமிஷ்னர் லட்சுமி ஆலோசனையின் படி அடையாறு மாவட்டம் துணை கமிஷ்னர் விக்ரமன் அறிவுறைகளின் படி அடையாறு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கை அதிகப்படுத்தப்பட்டும் தனிப்படைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதன் விளைவாக குற்றங்களின் எண்ணிக்கை கனிசமாக குறைந்து வரும் நிலையில் குற்றங்களில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் விரைந்து கைது செய்யப்பட்டும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நீலாங்கரையில் பாலவாக்கம் பகுதியில் வசித்து வரும் சசிகுமார் வயது 22
என்பவர் கடந்த 08 ம் தேதி தன்னுடைய வீட்டு வாசலில் தனனுடைய இருசக்கர
வாகனமான சுமார் 2 லட்சம் மதிப்புள்ள விலையுர்ந்த இருசக்கர வாகனத்தை
நிறுத்தி வைத்திருந்ததாகவும் மறுநாள் காலை எழுந்து பார்த்த போது தன்னுடைய இருசக்கர
வாகனத்தை காணவில்லையென்று நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
புகாரின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் தினேஷ் தலைமை காவலர் பிரதீப் மற்றும்
முதல் நிலை காவலர் இன்பராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு
விசாரணை மேற்கொண்டதில் சம்பவ இடத்தை சுற்றியுள்ள கேமராக்களின் பதிவுகளில் இருக்கும் நபர்களை அடையாளம் கானப்பட்டு கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த குள்ளா (௭) அஜய் வயது 19 மற்றும் சந்தோஷ் வயது 19 ஆகிய இருவரையும் கைது செய்தனர். இருவரையும் விசாரணைசெய்தததில் இருந்து கடந்த 16.03.3031 ம் தேதி பாலவாக்கம் கோவிந்தன் நகரில் நடந்து சென்ற 63 வயது பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்து அப்பெண்ணின் கைப்பையை பறித்து சென்ற வழக்கிலும் தொடர்புடையவர்கள் என்பதும் தெரிய வந்தது. இரு வெவ்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட இருவரையும் விசாரணை முடித்து அவர்களிடம் இருந்து திருடப்பட்ட என்ற இருசக்கர வாகனத்தையும் திருட்டு சம்பவத்திற்கு பயன்படுத்திய மற்றொரு இருசக்கர வாகனத்தையும் கைப்பற்றி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
சுமார் 2 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை திருடிய வழக்கில் திறமையாக புலனாய்வு செய்த தனிப்டையினரான உதவிஆய்வாளர் தினேஷ் தலைமைகாவலர்
பிரதீப் மற்றும் முதல் நிலை காவலர் இன்பராஜ் ஆகியோரை போலீஸ் கமிஷ்னர் வெகுவாக பாராட்டியுள்ளார்.

