சென்னை காவல் ஆணையரகத்தில் பணிபுரிந்து வரும் அமைச்சுப் பணியாளர்கள், காவலர்கள், அலுவலர்கள் அனைவருக்கும் காவல்துறையினர் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட கொரோனா தொற்று தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி முகாமை இன்று காலை சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால்துவக்கி வைத்தார் இதில் பெருநகர சென்னை மாநகராட்சி மருத்துவர்கள், கூடுதல் போலீஸ் கமிஷ்னர் இணை கமிஷ்னர்கள் துணை கமிஷ்னர்கள் காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



