தூத்துக்குடி மாவட்டத்தில் ஏப்ரல் 25, மே 1 ஆகிய தினங்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மகாவீர் ஜெயந்தி (ஏப்ரல் 25) மற்றும் மே தினம் (மே 1) முன்னிட்டு அன்று தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடை/பார்) விதிகள், 2003 விதி 12 துணை விதி(2)-இன்படி அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL1/FL2/FL3/FL3A/FL3AA/FL11 உள்ள உரிமத்தலங்களில் அமைந்துள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும்.
மேற்படி நாளில் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதால் அன்றைய தினம் மதுபான விற்பனை நடைபெறக் கூடாது. மேற்குறிப்பிட்ட தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.

