சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் , உத்தரவுபடி போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு (கிழக்கு மண்டலம்) ஒருங்கிணைந்து போக்குவரத்து சீர் செய்தல், வாகன நெரிசலை குறைத்தல், பொதுமக்கள் பிளாட்பாரம் பகுதியில் தடையில்லாமல் செல்லுதல் மற்றும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது விழிப்புணர்வுடன் கூடிய நடவடிக்கை எடுத்தல், கொரோனாநோய் தொற்று தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தடுப்பு ஊசி போடும் அவசியம் குறித்து விழிப்புணர்வை பொதுமக்கள் வர்த்தகர்கள் பொதுமக்கள் கூடும் இடங்களில் கிழக்கு மாவட்ட துணை கமிஷ்னர் மருத்துவர். பாலகிருஷ்ணன்.தலைமையில் கீழ்பாக்கம், மைலாப்பூர், திருவல்லிக்கேணி மாவட்ட அனைத்து போக்குவரத்து காவல் நிலைய சரகங்களிலும் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் முக கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல், அடிக்கடி கிருமிநாசினி கொண்டு கையை கழுவுதல் மற்றும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளுதல் குறித்து அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வுடன் போக்குவரத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.



