தமிழகத்தில் வருகின்ற 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட 5 தொகுதிகளுக்கான திருநெல்வேலி மாவட்ட எல்லைக்கு உட்பட்ட 600 வாக்கு மையங்களுக்கு வாக்கு செலுத்தும் இயந்திரத்தை பாதுகாப்பாக எடுத்துச் செல்வதற்காக 209 வாகனங்களில் காவலர்கள் பணிக்கு நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதனை நேற்று திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வாக்கு இயந்திரத்தை எடுத்துச்செல்லும் காவல்துறையினர் நேற்று அவரவர்க்கு நியமிக்கப்பட்ட தாலுகா அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் பின் அங்கிருந்து தேர்தல் அதிகாரிகள் மேற்பார்வையில் வாக்கு செலுத்தும் இயந்திர பெட்டியை பாதுகாப்பாக வாக்குச்சாவடிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனக் கூறினார்.




