• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் தீவிரமாக கண்காணித்து கடும் நடவடிக்கை – மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்

policeseithitv by policeseithitv
April 3, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
காவல் துறையினருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகளை தூத்துக்குடி ஆட்சியர் துவக்கி வைத்தார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் தீவிரமாக கண்காணித்து கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் / தேர்தல் அலுவலர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, நேர்மையான முறையில் தேர்தலை நடத்திட வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கிடா வண்ணம் மாவட்டத்தில் பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் நியமனம் செய்யப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில், 01.04;.2021 அன்று இரவு 09.00 மணியளவில் தூத்துக்குடி நகரம், கதவு எண்.31, டூவிபுரம் முதல் தெரு என்ற முகவரியில் ஒரு வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் நபர்கள் நடமாட்டம் உள்ளதாகவும், பெருமளவில் பணத்தை பதுக்கி வைத்துள்ளதாகவும் புகார் வரப்பெற்றதைத் தொடர்ந்து, பறக்கும்படையினர் மற்றும் மத்திய அரசு வருமான வரித்துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டு, வருமானவரித்துறையினர் மேற்படி முகவரியில் உள்ளவீட்டில் முழுசோதனை நடத்தியதன் அடிப்படையில்,
மேற்படி வீட்டில் சென்னையைச் சேர்ந்த தணிகை அரசு த-பெ.ஜெயராம், நடராஜன் த-பெ.துரைப்பாண்டியன், பவுர்சிங் த-பெ.டேவிட் ஜெயமணி, தட்சணாமூர்த்தி த-பெ.ராமலிங்கம் மற்றும் டைட்டஸ் த-பெ.தோணி ஆகிய ஐந்து நபர்கள் தங்கியிருந்ததும், அவர்களிடம் கணக்கில் வராத தொகை ரூ.5,17,000/- இருப்பு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு, விசாரணையில் வேறு விபரங்கள் தெரிவிக்கப்படாததாலும், ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாததாலும் மேற்படி தொகை வருமான வரித்துறையினரால் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக, தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் குற்ற வழக்கு எண்.118/2021 நாள்.02.04.2021 பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக வருமான வரித்துறையினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், 26.02.2021 முதல் 01.04.2021 வரை அன்று தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக, மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் செயல்பட்டுவரும் கட்டுப்பாட்டு அறைக்கு 178 புகார்கள் வரப்பெற்று அவை அனைத்தும் சம்பந்தப்பட்ட பறக்கும்படைக் குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பின்னர் தேர்தல் நடத்தை விதிகள் மீறியது தொடர்பாக, 195 குற்றவழக்குகளும், பணம் மற்றும் இதரபொருட்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக 5 குற்ற வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 01.04.2021 அன்று மட்டும் மாவட்ட தேர்தல் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு 18 புகார்கள் வரப்பெற்று விசாரணை செய்யப்பட்டுள்ளது. 01.04.2021 அன்று தேர்தல் நடத்தை விதிகள் மீறப்பட்டது தொடர்பாக 18 குற்றவழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
தூத்துக்குடிமாவட்டத்தில் நாளது தேதிவரை பறக்கும் படைமற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினரால் ரூ1,56,31,301/- ரொக்கமும்,ரூ.5,11,21,000/- மதிப்புள்ள தங்கநகைகளும், ரூ.1,45,210/- மதிப்பிற்கு மது பாட்டில்கள்,ரூ.1,38,650/- மதிப்புடைய கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் ரூ.2,83,587/- இதர பெர்ருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் பணம் மற்றும் இதரபொருட்கள் வாக்காளர்களுக்கு வழங்குவதை தடைசெய்வது தொடர்பாக, அனைத்து பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினருக்கு தீவிரமாக கண்காணிக்க அறிவுரைகள் வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது மாவட்ட ஆட்சியர் / மாவட்ட தேர்தல் அலுவலர் செந்தில்ராஜ்,  தெரிவித்துள்ளார்.
Previous Post

தேவகோட்டையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பொதுக்கூட்டம்

Next Post

இந்தியாவில் கொரோனா வைரஸ் ஏப்ரல் 15 முதல் 20-ம் தேதிக்குள் கொரோனா தொற்று உச்சத்தை தொடும்

Next Post
‘பிற வைரஸ்கள் போலவே பலவித உருமாற்றங்களை கொரோனா வைரஸ் அடைகிறது’. அமெரிக்கா  விஞ்ஞானி சரிஜி பாண்ட் பேட்டி

இந்தியாவில் கொரோனா வைரஸ் ஏப்ரல் 15 முதல் 20-ம் தேதிக்குள் கொரோனா தொற்று உச்சத்தை தொடும்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In