தூத்துக்குடி மாவட்டத்தில் பதட்டமான வாக்குசாவடிகளுக்கு கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ள நுண் பார்வையாளர்களுக்கான பணியாற்றக்கூடிய சட்டமன்ற தொகுதிக்கான ஒதுக்கீடு இன்று நடைபெற்றது
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் / மாவட்ட தேர்தல் அலுவலர் கி.செந்தில்ராஜ், மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொது பார்வையாளர்கள் ஜுஜவரப்பு பாலாஜி, (தூத்துக்குடி), அஸ்வானி குமார் சௌதாரி, (விளாத்திகுளம், கோவில்பட்டி), சுஷில் குமார் படேல், (திருச்செந்தூர்), சவின் பன்சால், இ,ஆ.ப., (ஸ்ரீவைகுண்டம்), அனில் குமார், (ஓட்டப்பிடாரம்) ஆகியோர் முன்னிலையில் பதட்டமான வாக்குசாவடிகளுக்கு கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ள நுண் பார்வையாளர்களுக்கான பணியாற்றக்கூடிய சட்டமன்ற தொகுதிக்கான ஒதுக்கீடு ரேண்டம் இன்று நடைபெற்றது.
பின்னர் மாவட்ட ஆட்சியர் / மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 2097 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 302 வாக்குசாவடிகள் பதட்டமானவை என்றும் 5 வாக்குசாவடிகள் மிக பதட்டமானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் மொத்தம் 330 நுண் பார்வையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நுண் பார்வையாளர்கள் செல்லக்கூடிய சட்டமன்ற தொகுதிக்கான ரேண்டம் இன்று நடைபெற்றது.
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு 50 நுண் பார்வையாளர்களும், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிககு 71 நுண் பார்வையாளர்களும், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிககு 48 நுண் பார்வையாளர்களும், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிககு 38 நுண் பார்வையாளர்களும், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிககு 58 நுண் பார்வையாளர்களும், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிககு 42 நுண் பார்வையாளர்களும் ரேண்டம் மூலம் இன்று ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறுவதற்கு முன் தினம் நுண் பார்வையாளர்களுக்கு தாங்கள் செல்லக்கூடிய வாக்குசாவடிகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் கலோன், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் செயல் அலுவலர் விஷ்ணுசந்திரன், தேசிய தகவல் மைய அலுவலர் சரவணன், தேர்தல் வட்டாட்சியர் ரகு மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

