நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 10 ரவுடிகள் கைது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தீவிர நடவடிக்கை.
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி முதல் இன்று வரை 50 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். இது தவிர குற்றவிசாரணை நடைமுறைச் சட்டப்படி 1523 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தலின் போது பிரச்சனையில் ஈடுபடக்கூடியவர்கள் என 313 பேர் கண்டறியப்பட்டு அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 19 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கை மற்றும் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து விடுதிகளிலும் அனைத்து காவல் நிலைய அதிகாரிகளும் அவ்வப்போது சோதனை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த தீவிர நடவடிக்கையில் கடந்த 28.03.2021 அன்று 27 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே போன்று இன்று 10 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி இன்று (31.03.2021) தூத்துக்குடி நகர துணை காவல் கண்காணிப்பாளர் திரு. கணேஷ் மேற்பார்வையில், தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. ஜெயந்தி தலைமையில் உதவி ஆய்வாளர்கள் திரு. வேல்ராஜ், திரு. மகாராஜா, முதல் நிலை காவல்கள் திரு. சுந்தர் சிங், திரு. பாலகுமார், காவலர் திரு. சிலம்பரசன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டபபோது தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலதண்டாயுத நகரை சேர்ந்த சண்முகம் அஜய் மாடசாமி (40), லெட்சுமணன் மகன் சண்முக விக்னேஷ் (24), தமிழரசன் மகன் ஜெயந்திரன் (21), ராஜகோபால் நகரை சேர்ந்த வேல்சாமி மகன் பூங்குமார் (21), முத்துபாண்டி மகன் முத்துராஜா (23), தாளமுத்துநகரை சேர்ந்த முத்துபாண்டி மகன் ரமேஷ் (எ) கண்ணன் (16) ஆகிய 6 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 1 அரிவாள், 2 கத்தி ஆகிய ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
அதனையடுத்து ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட துணை காண்காணிப்பாளர் திரு. வெங்கடேசன் மேற்பார்வையில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராஜசுந்தர் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. திலீபன் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டபோது செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வி. கோவில்பத்து பகுதியை சேர்ந்த சந்தானம் மகன்கள் கணேசன் (23), சந்தனராஜ் (20), தேஞ்சான்சோலை பகுதியை சேர்ந்த அங்கப்பன் மகன் மருதுபாண்டி (21), தென்திருப்பேரை மணல்மேடு பகுதியை சேர்ந்த செல்வன் மகன் பெனிஸ்சிங் (20) ஆகிய 4 பேரை கைது செய்தனர். ஆக மொத்தம் இன்று ஒரே நாளில் 10 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

