சாத்தான்குளம் வழக்கில் 9 பேருக்கு மரண தண்டனை குற்றம் செய்யும் போலீசாருக்கு விழுந்த ‘மரண அடி’. இனி எந்தவொரு போலீசாரும் சட்டத்தைத் தன் கையில் எடுக்கத் துணிய மாட்டார்கள் : நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம்’ கட்சியின் பொதுச்செயலாளரும், வழக்கறிஞருமான சி.அருணா தேவி ரமேஷ் பாண்டியன் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என வரவேற்பு!!
தூத்துக்குடி, ஏப்ரல், 7

உலகையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு நீதிமன்றம் இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பளித்துள்ளது.நீதிபதி முத்துக்குமரன் தனது தீர்ப்பில், “தந்தை முன் மகனையும், மகன் முன் தந்தையையும் சித்ரவதை செய்தது மனம் பதைபதைக்க வைக்கிறது. ஒரு குடும்பத்தின் ஆணிவேரே பிடுங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கினால் அது மற்ற போலீசாருக்கு அச்சத்தை ஏற்படுத்தாது. எனவே, மரண தண்டனை விதிப்பதைத் தவிர வேறு வழியில்லை” என்று அதிரடியாகத் தெரிவித்தார். வழக்கறிஞர் சி.அருணா தேவி ரமேஷ் பாண்டியன் அறிக்கை: இந்தத் தீர்ப்பு குறித்து ‘நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம்’ கட்சியின் பொதுச்செயலாளரும், வழக்கறிஞருமான சி.அருணா தேவி ரமேஷ் பாண்டியன் வெளியிட்டுள்ள பரபரப்பு அறிக்கையில்:”இந்தத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது. இது குற்றம் செய்யும் போலீசாருக்கு விழுந்த ‘மரண அடி’. இனி எந்தவொரு போலீசாரும் சட்டத்தைத் தன் கையில் எடுக்கத் துணிய மாட்டார்கள். தவறு செய்பவர்கள் சட்டப்படியே தண்டிக்கப்பட வேண்டும்; அதை விடுத்துத் தண்டனை கொடுக்கப் போலீசாருக்கு எவ்வித அருகதையும் இல்லை என்பதை இந்தத் தீர்ப்பு உறுதி செய்துள்ளது,” எனத் தெரிவித்துள்ளார்.பாதிக்கப்பட்ட ஜெயராஜ் – பென்னிக்ஸ் குடும்பத்திற்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்துள்ள இந்த உச்சபட்ச நீதி, தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. என்று தெரிவித்தார். இந்தத் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என வழக்கறிஞர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் தெரிவித்தார்.
