தூத்துக்குடி ராஜகோபால் நகர் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் 33 ஆம் ஆண்டு கொடை விழாவை முன்னிட்டு 17.03.26 செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணி அளவில் ஸ்ரீ முத்தாரம்மனுக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் மதியக் கொடை சிறப்பாக நடைபெற்றது. கொடை விழாவினை முன்னிட்டு மதியம் ஒரு மணி அளவில் 3500 பக்தர்கள் கலந்து கொண்ட மாபெரும் மகா அன்னதானம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
தொடர்ந்து மாலை 6 மணிக்கு முளைப்பாரி எடுத்து வருதல் இரவு 8 மணிக்கு நேர்ச்சை எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 12 மணியளவில் ஸ்ரீ முத்தாரம்மன் பரிவார மூர்த்திகளுக்கு, ஆறுமுகம் நையாண்டி மேளத்துடன் நாசரேத் துரை கணியான் மகுட கச்சேரியுடன் வான வேடிக்கைகளுடன் சாமக் கொடை சிறப்பாக நடைபெற்றது. இதற்கான விழா ஏற்பாடுகள் அனைத்தையும் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் கொடை விழா கமிட்டியாளர்கள் மற்றும் தூத்துக்குடி ராஜகோபால் நகர் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

