தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரிலுள்ள ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி&காலபைரவர் சித்தர் பீடத்தில் மங்களம் தரும் சனீஸ்வரர் 9அடி உயரத்தில் எழுந்தருளியுள்ளார்.
சிறப்புபெற்ற சனீஸ்வரருக்கு வரும் 6ம்தேதி(வெள்ளிக்கிழமை) சனிப்பெயர்ச்சி விழா ”சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது.
5ம்தேதி (வியாழக்கிழமை) காலை 10.10மணிக்கு மஹா கணபதி ஹோமத்துடன் சனிப்பெயர்ச்சி விழா தொடங்குகிறது. தொடர்ந்து, அன்று மாலை 6.00மணிக்கு சங்கல்பம், இரவு 7.00மணிக்கு சனீஸ்வரருக்கு யாகத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.
6ம்தேதி அதிகாலை 5.00மணிக்கு மங்களம் தரும் சனீஸ்வரருக்கு ”சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் சனிப்பெயர்ச்சிக்கான சிறப்பு வழிபாடுகள் மஹா யாகத்துடன் தொடங்குகிறது.
காலை 6.00மணிக்கு சனீஸ்வரருக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், திருநீறு, பால், பஞ்சாமிர்தம், தேன், இளநீர் என 64வகையான அபிஷேகங்கள் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடக்கிறது.
தொடர்ந்து சரியாக 7.37மணிக்கு சனிபகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடையும் நேரத்தில் மங்களம் தரும் சனீஸ்வரருக்கான சிறப்பு வழிபாடுகள் மற்றும் பரிகார வழிபாடுகள் ”சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் சிறப்பாக நடக்கிறது.
இந்நேரத்தில், சனிப்பெயர்ச்சியால் பாதகத்திற்கு உள்ளாகும் ”மீனம், மேஷம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம்” ஆகிய ராசிக்காரர்கள் மங்களம் தரும் சனீஸ்வரரை பரிகாரம் செய்து வழிபடுவது வெகு சிறப்பாகும்.
அதோடு, இதர ராசிகளான ”ரிஷபம், துலாம், மகரம்” ராசிக்காரர்களும் மங்களம் தரும் சனீஸ்வரரை வழிபடுவது சிறப்பாகும். சனிப்பெயர்ச்சி வழிபாட்டை தொடர்ந்து, சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் சனீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரத்துடன், சிறப்பு யாக வழிபாடுகள், மஹா தீபாராதனைகள் நடக்கிறது.
சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சித்தர் பீடத்தில் பக்தர்களுக்கு மஹா அன்னதானம் வழங்கப்படுகிறது.
இவ்விழாவில், பரிகாரம் செய்யவேண்டிய ராசிக்குரியவர்கள் தங்களது பெயர்களை 94 88 70 48 32 என்ற எண்ணில் முன்பதிவு செய்து சிறப்பு வழிபாட்டில் பங்கேற்கலாம். சனிப்பெயர்ச்சி விழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்றிட ”சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் கேட்டுக்கொண்டுள்ளார்.

