ஓட்டப்பிடாரம்,
பிப், 27
திமுகவின் “வெல்லும் தமிழ்ப் பெண்கள் – ஸ்டாலினின் மகளிர் படை” வீடு வீடாகச் செல்லும் தேர்தல் பிரச்சாரத்தை பிப்ரவரி 23, 2026 அன்று தொடங்கியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் வழிகாட்டுதலில், திராவிட மாடல் அரசின் மகளிர் நலத் திட்டங்களை வீடு வீடாகக் கொண்டு சேர்க்கும் இந்த பரப்புரை, உலக மகளிர் தினமான மார்ச் 8-க்குள் அனைத்து வீடுகளையும் சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது அதன்படி தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, கால்நடை பராமரிப்பு துறை அமைச்சரும் தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின் பெயரில்
தூத்துக்குடி தெற்கு மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் “வெல்லும் தமிழ் பெண்கள்” தேர்தல் பிரச்சாரம் தொடங்கப்பட்டது. இதனை
ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளரும் பஞ்சாயத்து தலைவருமான அ இளையராஜா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். திமுக மகளிர் நிர்வாகிகள் தொண்டர்கள் வீடு வீடாக சென்று துண்டுப் பிரசுரங்கள் வழங்கி மக்களிடம் ஆதரவு கோரி தீவிர பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். இது குறித்து ஒன்றிய செயலாளர் இளையராஜா தெரிவித்ததாவது :
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வரலாற்று வெற்றியை உறுதி செய்து மீண்டும் தளபதி ஸ்டாலினை தமிழக முதல்வராக அரியணையில் அமர்த்தும் வரை கண் துஞ்சாமல் பணியாற்ற வேண்டும்.விடியல் அரசின் மகளிர் நலத்திட்டங்களை மக்களிடம் எடுத்துரைத்தல். மூலம் தளபதியார் கரத்தை மேலும் வலுப்படுத்த முடியும்.
வருகிற மார்ச் 8 ம் தேதிக்குள் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வீடுகளுக்கும் வெல்லும் தமிழ் பெண்கள் பிரச்சாரப்படை மூலம் அரசின் சாதனை திட்டங்கள் அனைத்தையும் துண்டு பிரசுரங்களாக அனைத்து வீடுகளுக்கும் வீடு வீடாக சென்று வழங்க வேண்டும் குறிப்பாக மகளிர் திட்டங்கள் செயல்படுவதையும் விளக்கி தீவிர களப்பணியில் ஈடுபட வேண்டுமென தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்த ஒன்றிய செயலாளர் இளையராஜா தெரிவித்தார்.

