• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

100 நாள் வேலைத்திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம் செய்த ஒன்றிய அரசை கண்டித்து மாப்பிள்ளையூரணியில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம்

policeseithitv by policeseithitv
December 24, 2025
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
100 நாள் வேலைத்திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம் செய்த ஒன்றிய அரசை கண்டித்து மாப்பிள்ளையூரணியில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தூத்துக்குடி,
மகாத்மா காந்தி பெயரில் செயல்பட்டு வந்த கிராமப்புற 100 நாள் வேலை உறுதித் திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு சீர்க்குலைத்துள்ளது. இதற்கு ஆதரவான நிலையை அதிமுக எடுத்துள்ளது. இது கிராமப்புற மக்களுக்கு செய்த அநீதி ஆகும். கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 2004ம் ஆண்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் கொண்டுவரப்பட்ட 100 நாள் வேலை உறுதி திட்டத்திலிருந்து மகாத்மா காந்தி பெயரை நீக்கி உள்ளனர். ஒன்றிய அரசு வழங்க வேண்டிய சம்பளத் தொகையில் 40 சதவீதம் மாநில அரசு வழங்க வேண்டும் என்று சட்டத்தை திருத்தியுள்ளனர். மொத்தத்தில் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்துள்ளனர். ஒன்றிய அரசின் மக்கள் விரோத பாஜக அரசின் போக்கைக் கண்டித்து மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியின் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன் வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவுரைப்படி தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் தலைமையில் மாப்பிள்ளையூரணி ஆசைதம்பி நகரில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியை சார்ந்த நிர்வாகிகள் ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் அவைத்தலைவர் ஜோசியர் முருகன்,  மாவட்ட தொ.அ.துணை அமைப்பாளர் அந்தோணி தனுஸ் பாலன்,  மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் பிலோமின் ராஜ், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் தங்கமாரிமுத்து, ஒன்றிய துணை செயலாளர்கள் கணேசன், ராமச்சந்திரன் மாவட்ட பிரதிநிதி சிவக்குமார், வழக்கறிஞர் அணி சோனாராஜன், காங்கிரஸ் கட்சியை சார்ந்த  எட்வட்ராஜ், அந்தோணி மிக்கேல், கண்ணன், ஆறுமுகம், அருள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த  சங்கரன், கிருஷ்னன், பிச்சையா, முருகேசன், ஐயப்பன், தாமோதரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த சவுந்திரராஜ், கொம்பையா, மாடசாமி, விடுதலை சிறுதை கட்சிய சார்ந்த மண்டல துணைச் செயலாளர் அர்ஜீனன்,  மாவட்ட செயலாளர்  கணேசன்,  ஓட்டப்பிடாரம் பொறுப்பாளர் ரஞ்சித் பாண்டியன், மனித நேய ஜனநாயககட்சியை சார்ந்த ஜாஹீர் உசேன், ம.நீ.ம கட்சியை சார்ந்த சந்தனம், சேர்மத்துரை, சிபிஎம்எல் கட்சியை சார்ந்த சிவராமன், முருகன், அணி நிர்வாகிகள் ராஜேந்திரன், மதன், மகாராஜன், மகளிர் அணி  ஜெசிந்தா , சண்முகத்தாய், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சேவியர், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதி ராஜா மற்றும் கிளை நிர்வாகிகள், கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள், பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Previous Post

மாநில அளவிலான தடகளப் போட்டி காரைக்குடியில் நடைபெற்றது..

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In