• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும், பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் இசக்கிராஜா வேண்டுகோள்.

policeseithitv by policeseithitv
December 4, 2025
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும், பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் இசக்கிராஜா வேண்டுகோள்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் இசக்கிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக 3ம் தேதி நடந்த நிகழ்வுகள், வெறும் சட்டம் – ஒழுங்கு பிரச்சனை மட்டுமல்ல் இது நிர்வாகத் திறமை, நீதித்துறை உத்தரவு மற்றும் மக்களின் நம்பிக்கை சார்ந்த ஒரு சிக்கலான விவகாரமாகும். இந்த விவகாரத்தில் ஆளும் நிர்வாகம் கையாண்ட விதம், அதனால் ஏற்பட்டுள்ள அரசியல் பின்னடைவுகள் மற்றும் இனிவரும் காலங்களில் இதைக் கையாள்வதற்கான வழிமுறைகள் குறித்து பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கம் தனது கருத்தை முன்வைக்கிறது.
திருப்பரங்குன்றம் மலையானது மத நல்லிணக்கத்தின் அடையாளமாகவும், அதேசமயம் நீண்ட கால உரிமைப் பிரச்சனைக்குரிய இடமாகவும் இருந்து வருகிறது. மலையின் அடிவாரத்தில் முருகப்பெருமான் கோயிலும், மலை உச்சியில் இஸ்லாமியர்களின் புனிதத் தலமான சிக்கந்தர் பாதுஷா தர்காவும் அமைந்துள்ளன. தர்காவிற்கு மிக அருகாமையில் காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் பாறையில் அமைந்த பழமையான தீபத்தூண் ஆகியவை உள்ளன. பல தசாப்தங்களுக்கு முன்பு வரை கார்த்திகை தீபத் திருநாளன்று இந்தத் தீபத்தூணில்தான் விளக்கு ஏற்றப்பட்டு வந்தது. காலப்போக்கில், அந்த நிலம் யாருக்குச் சொந்தம் என்ற சர்ச்சை எழுந்ததால், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்காகக் கடந்த சில ஆண்டுகளாக மலை உச்சியில் தீபம் ஏற்றுவதை நிறுத்திவிட்டு, மலையில் சற்று கீழே உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபத்தில் தீபம் ஏற்றும் நடைமுறை நிர்வாகத்தால் கொண்டுவரப்பட்டது. இதை எதிர்த்தே பக்தர்கள் நீதிமன்றத்தை நாடினர்.
இந்த ஆண்டு கார்த்திகை தீபத்தின்போது, பாரம்பரிய முறைப்படி தீபத்தூணில் விளக்கு ஏற்ற அனுமதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. தொல்லியல் துறை மற்றும் வருவாய்த்துறை ஆவணங்களின்படி, தீபத்தூண் அமைந்துள்ள பகுதி பொதுவானது என்றும், அது வழிபாட்டு உரிமை சார்ந்தது என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அனைத்து ஆவணங்களையும் பரிசீலித்த உயர்நீதிமன்றம், கடந்த டிசம்பர் 1-ம் தேதியன்று, மனுதாரர் மற்றும் 10 பேர் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், உள்ளுர் காவல்துறையின் மீது மனுதாரர் நம்பிக்கை இன்மை தெரிவித்ததால் அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க மத்திய தொழில் பாதுகாப்புப் படையை ஈடுபடுத்தலாம் என்றும் மிகத் தெளிவான உத்தரவைப் பிறப்பித்தது.

நீதிமன்ற உத்தரவு இருந்தபோதிலும், அதைச் செயல்படுத்துவதில் நிர்வாகம் காட்டிய அணுகுமுறைதான் தற்போதைய சர்ச்சைக்கு முழுக் காரணம். டிசம்பர் 1-ம் தேதியன்றே தீர்ப்பு வெளியானது. அந்தத் தீர்ப்பில் அரசுத் தரப்புக்கு உடன்பாடு இல்லை என்றால், உடனடியாக டிசம்பர் 2-ம் தேதி காலை அமர்வில் மேல்முறையீடு செய்து தடை வாங்கியிருக்க வேண்டும். அதைச் செய்யாமல் கடைசி நேரம் வரை நிர்வாகம் அமைதி காத்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது. தீபம் ஏற்ற வேண்டிய நாளான டிசம்பர் 3-ம் தேதி அன்று, திடீரென பாரதிய நகரிக் சுரக்ஷா சம்ஹிதா பிரிவு 163-ன் கீழ் பழைய 144 தடை உத்தரவு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. நீதிமன்ற உத்தரவை கையில் வைத்துக்கொண்டு தீபம் ஏற்றச் சென்ற பக்தர்களை, நிர்வாக உத்தரவைக் காட்டி காவல்துறை தடுத்தது. இதனால் ஏற்பட்ட தள்ளுமுள்ளு மற்றும் கைது நடவடிக்கைகள், பக்தர்களுக்கும் அரசுக்கும் இடையிலான நேரடி மோதலாக மாறியது.
இந்தச் சம்பவத்தை அரசு கையாண்ட விதம், அரசியல் ரீதியாக ஆளும் தரப்புக்குப் பலவீனத்தையே ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றமே அனுமதித்தும் அரசு தடுத்தது என்ற செய்தி பொதுமக்களிடம் சென்றடைந்துள்ளது. இது ஆன்மீக நம்பிக்கை கொண்ட நடுநிலை வாக்காளர்களை அரசிடமிருந்து அந்நியப்படுத்தும் சூழலை உருவாக்கியுள்ளது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவே தடை விதிக்கப்பட்டது என்று அரசு கூறினாலும், இதை குறிப்பிட்ட மதத்திற்கு எதிரான அடக்குமுறை என்று சித்தரிப்பதற்கு எதிர்தரப்பிற்கு அரசே வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துவிட்டது. மேலும், நீதிமன்ற உத்தரவை நிர்வாகம் செயல்படுத்தாதது, சட்டத்தின் ஆட்சியை கேள்விக்குறியாக்கி உள்ளது. இது எதிர்காலத்தில் நிர்வாகத்தின் மீதான நம்பகத்தன்மையைக் குறைக்கும் அபாயம் உள்ளது.
எதிர்காலத்தில் நிர்வாகம் பிடிவாதத்தை விடுத்து, விவேகத்துடன் செயல்பட்டால் மட்டுமே இதுபோன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும். நீதிமன்றத் தீர்ப்பு வந்தவுடன் அதை ஏற்பதா அல்லது எதிர்ப்பதா என்பதை நிர்வாகம் உடனடியாக முடிவு செய்ய வேண்டும். கடைசி நேரத்தில் காவல்துறையை வைத்துத் தடுப்பது, தேவையற்ற பதற்றத்தையே உருவாக்கும். மேலும், தர்கா நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகம் ஆகிய இரு தரப்பையும் அழைத்து மாவட்ட நிர்வாகம் வெளிப்படையாகப் பேசியிருக்க வேண்டும். தர்கா தரப்பிலேயே எதிர்ப்பு இல்லாதபோது, அரசு தானாக முன்வந்து தடுப்பதைத் தவிர்த்திருக்கலாம். ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பிரச்சனை வராமல் இருக்க, வருவாய்த்துறை ஆவணங்களின் அடிப்படையில் அந்த இடத்தின் உரிமையை உறுதி செய்து, ஒரு நிலையான வழிகாட்டு நெறிமுறையை உருவாக்க வேண்டும். ஆன்மீகம் சார்ந்த உணர்வுப்பூர்வமான விஷயங்களில், காவல்துறையின் பலப்பிரயோகத்தைக் குறைத்து, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதே முதிர்ச்சியான அரசின் அடையாளமாகும்.

ஆகவே, திருப்பரங்குன்றம் விவகாரத்தில், அரசு இன்னும் கொஞ்சம் ராஜதந்திரத்துடனும், சட்ட விழிப்புணர்வுடனும் செயல்பட்டிருக்கலாம் என்பதே எங்களது நிலைப்பாடு. நீதிமன்ற உத்தரவை மதிப்பதும், மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதும் ஒருங்கே அமைந்தால் மட்டுமே இதுபோன்ற நிர்வாகச் சிக்கல்களைத் தவிர்க்க முடியும் இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Previous Post

தூத்துக்குடியில் 7 வழித்தடங்களில் புதிய பேருந்து இயக்கத்தை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Next Post

காமராஜரை இழிவுப்படுத்திய முக்தாா் அகமது மீது நடவடிக்கை எடுக்ககோாி நாடாா் பேரவை மாநில வழக்கறிஞர் பிாிவு தலைவர் ஜெயச்சந்திரன் எஸ்.பியிடம் புகாா்

Next Post
காமராஜரை இழிவுப்படுத்திய முக்தாா் அகமது மீது நடவடிக்கை எடுக்ககோாி நாடாா் பேரவை மாநில வழக்கறிஞர் பிாிவு தலைவர் ஜெயச்சந்திரன் எஸ்.பியிடம் புகாா்

காமராஜரை இழிவுப்படுத்திய முக்தாா் அகமது மீது நடவடிக்கை எடுக்ககோாி நாடாா் பேரவை மாநில வழக்கறிஞர் பிாிவு தலைவர் ஜெயச்சந்திரன் எஸ்.பியிடம் புகாா்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In