• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

குடியிருப்புக்குள் புகுந்த மழைநீர் – பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் அகற்ற கோரி மனு – ஆக்‌ஷனில் இறங்கி அதிரடி காட்டிய ஆணையர் ப்ரியங்கா ஐ.ஏ.எஸ் – பொதுமக்கள் பாராட்டு.

policeseithitv by policeseithitv
October 22, 2025
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
குடியிருப்புக்குள் புகுந்த மழைநீர் – பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் அகற்ற கோரி மனு – ஆக்‌ஷனில் இறங்கி அதிரடி காட்டிய ஆணையர் ப்ரியங்கா ஐ.ஏ.எஸ் – பொதுமக்கள் பாராட்டு.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி.
தூத்துக்குடியில் 4 நாட்களாக பெய்த கன மழையால் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது குறிப்பாக தூத்துக்குடி ராஜீவ் நகர் வடக்கு 6வது தெரு பகுதியில் மழை நீர் தேங்கி வீட்டிற்குள் புகுந்து வருவதால் பொதுமக்கள் மிகவும் அவதிபட்டு வருவதாகவும் போர் கால அடிப்படையில் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கோள்ள வேண்டும் என மூத்த வழக்கறிஞரும் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் மாநில வழக்கறிஞர் அணி செயலாளருமான ஜெயபால் மாநகராட்சி மண்டல நிர்வாகத்திற்கு புகார் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில் அவர் தெரிவித்ததாவது: ஐயா நான் மேற்கண்ட முகவரியில் வசிக்கிறேன். மூத்த குடிமகன் ஆவேன் நான் வசிக்கும் ராஜீவ் நகர் வடக்கு 6வது தெரு மற்றும் அதன் சுற்று பகுதியில் உள்ள தெருவில் முறையாக வடிகால் வசதி செய்து கொடுக்காமல் பாதாள சாக்கடை திட்டம் என்ற பெயரில் தெருக்களை தோண்டி சரியாக மூடாமல் மேடு பள்ளமாக உள்ளது ஆனால் அந்த பகுதியில் மாநகராட்சியில் பணியாற்றும் சுகாதார அலுவலர் வசிக்கும் தெருவில் மட்டும் இரவு பகல் பாராமல் சரல் போட்டு தண்ணீர் தேங்காமல் செய்து உள்ளார்கள். சுகாதார அலுவலர் மட்டும்தான் மாநகராட்சிக்கு வரி செலுத்துகிறாரா? நாங்கள் என்ன நாதி அற்றவர்களா? நாங்கள் வரி செலுத்தவில்லையா? ரோட்டு தண்ணீர் வடிய முறையான வடிகால் இல்லாததால் அத்தனை தண்ணீரும் எங்கள் வீட்டிற்குள் வந்து விட்டது பல முறை மனு கொடுத்தும் எங்களது கோரிக்கை கிடப்பில் கிடக்கிறது. ஆகையால் மாநகராட்சி நிர்வாகம் போர் கால அடிப்படையில் மழை நீரை தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்று தனது மனுவில் தெரிவித்துள்ளார்.


அதன் பிறகும் அந்த பகுதி மண்டல அலுவலகம் சார்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத்தலைவர் எஸ்.பி.மாரியப்பன், அமைப்பின் மாநில வழக்கறிஞரணி செயலாளர் மூத்த வழக்கறிஞர் ராஜஜெயபால் மற்றும் நிர்வாகிகள் இன்று காலை தூத்துக்குடி மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்து வந்துள்ள நிலையில், இதுகுறித்து ஆணையர் ப்ரியங்கா கவனத்திற்கு விசயம் தெரியவர, தங்களது கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றுவதாகவும், ராஜீவ்நகர் வடக்கு குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ள மழைநீரை முழுமையாக அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார். இதனால் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிர்வாகிகள் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தும் திட்டத்தை கைவிட்டனர்.
ஆணையர் ப்ரியங்கா வழக்கறிஞரிடம் தெரிவித்த உத்திரவாதத்திற்கு ஏற்ப உடனடியாக மண்டல அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் குழுவை ராஜீவ்நகர் வடக்கு பகுதிக்கு அனுப்பி வைத்து ராட்ஷச மின் மோட்டார் மற்றும் ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் ஏராளமான மாநகராட்சி பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேர முடியாமல் குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடந்த 4 நாட்களாக வெளியே செல்ல முடியாமல் அவதியுற்று வந்தனர். இந்நிலையில் ஆணையர் ப்ரியங்கா எடுத்த அதிரடி நடவடிக்கையால் குடியிருப்பு பகுதிக்குள் சூழ்ந்துள்ள மழைநீரை மின்மோட்டார் மூலம் உறிஞ்சப்பட்டு அகற்றப்பட்டது. மேலும் பல இடங்களில் ஜேசிபி இயந்திரம் மூலம் மழைநீரை கால்வாய்க்கு திருப்பி விட்டு முழுவதுமாக மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோருக்கு தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.
தூத்துக்குடி மாநகராட்சியின் இந்த அதிரடி நடவடிக்கைக்கும் அதற்கு உறுதுணையாக இருந்த ஆணையர் ப்ரியங்காவிற்கும் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் அமைப்பின் தலைவர் எஸ்.பி.மாரியப்பன் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

Previous Post

கொடைக்கானலில்  துணிகரமாக ஸ்பா, மசாஜ் சென்டர்களில்  கொடிகட்டி பறக்கும் பாலியல் தொழில்!! உளவுத்துறை ரிப்போர்ட் மூலம் தென்மண்டல ஐஜி, திண்டுக்கல் சரக டிஐஜி, எஸ்.பி. ஆகியோர் இரும்பு கரம் கொண்டு  ஒடுக்குவார்களா??  சமூக ஆர்வலர்கள், சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு….

Next Post

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் ஆதரவற்றோர் இல்லங்களில் தீபாவளி சமுதாயப்பணி

Next Post
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் ஆதரவற்றோர் இல்லங்களில் தீபாவளி சமுதாயப்பணி

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் ஆதரவற்றோர் இல்லங்களில் தீபாவளி சமுதாயப்பணி

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In