• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் பெய்த கனமழையால் தேங்கிய மழைநீரை 3 மணி நேரத்தில் சரி செய்த மேயர் ஜெகன் பெரியசாமியின் அதிரடி வியூகம் பொதுமக்கள் பாராட்டு!!

policeseithitv by policeseithitv
October 16, 2025
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் பெய்த கனமழையால் தேங்கிய மழைநீரை  3 மணி நேரத்தில் சரி செய்த மேயர் ஜெகன் பெரியசாமியின் அதிரடி வியூகம் பொதுமக்கள் பாராட்டு!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி, அக்,

தூத்துக்குடி மாநகரில் வடகிழக்கு பருவமழை துவங்கிய முதல் நாளில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை தொடர்ந்து மழை பெய்து வந்தது. இந்நிலையில் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி இருந்தது. பழைய மாநகராட்சி அலுவலகம் ரயில்வே ஸ்டேஷன் ரோடு, குருஸ் பர்னாந்து சிலை அருகே, ஏவிஎம் மருத்துவமனை அருகே உள்ளிட்ட பல பகுதிகளில் மழைநீர் தேங்கி இருந்தது. இதனை அடுத்து மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா ஆகியோர் அதிகாரிகளுடன் அதிகாலை 5 மணி முதல் ஒவ்வொரு பகுதியாக நேரில் சென்று பார்வையிட்டு மழை நீரை அகற்றும் பணியில் மேயர் ஜெகன் பெரியசாமி துரிதமாக செயல்பட்டார். பொதுவாக நேற்று பெய்த கன மழை போல் தூத்துக்குடியில் மழை பெய்தால் மேற்கண்ட மழைநீர் வடிவதற்கு சுமார் 30 தினங்களாகும் தற்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின் படி, மாண்புமிகு உள்ளாட்சித் துறை அமைச்சர், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி, ஆகியோர் வழிகாட்டுதலின் பெயரில் தொழில்நுட்ப அதிகாரிகள் குழுவோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு பணிகள் மேற்கொண்டதால் தற்போது பெய்த மழையை விட மூன்று மடங்கு மழை பெய்தாலும் சில மணி நேரங்களில் மழைநீர் வடிந்து போகும் அளவிற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது

என்று தெரிவித்த மேயர் ஜெகன் பெரியசாமி மேலும் செய்தியாளர்களிடம் கூறுகையில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நேற்று வடகிழக்கு பருவ மழை பெய்தது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் மாநகராட்சியின் சார்பில் பல்வேறு பகுதிகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பழைய மாநகராட்சி அலுவலகம் அருகில் எப்போது மழை பெய்தாலும் மழைநீர் தேங்கியிருக்கும். இன்று அந்த நிலை மாறியுள்ளது. மழை நின்றவுடன் மழை நீர் அவ்வளவும் சென்று விட்டது. ஏழு சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. பத்து நாள் ஆனாலும் மழை நீர் தேங்கி நிற்கும். ஆனால் மாநகராட்சி எடுத்த நடவடிக்கையால் இரண்டு மணி நேரத்தில் மழைநீர் வடிந்து விட்டது. மாநகராட்சி பகுதி மக்கள் எங்கு வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம் மழைநீர் தேங்கவில்லை. கழிவுநீர் கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் சரி செய்யப்பட்டு வருகிறது. நான்கு மண்டலத்திலும் 5 வார்டுக்கு ஒரு டிவிஷன் பிரிக்கப்பட்டுள்ளது. அங்கு அதிகாரிகள் உள்ளனர். மூன்று வார்டுகளுக்கு ஒரு சுகாதார அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். மழை நீர் தேங்கியுள்ள பகுதியில் லாரி மூலம் மழை நீர் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் அதிகாரிகள் தொடர்ந்து செயல்பட்டு கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். பி.என்.டி காலனி பகுதியில் பல மாதங்களாக மழை நீர் தேங்கி இருக்கும். தற்போது பாதாள சாக்கடை பணிகள் நடைபெறுவதால் ஒரு சில இடங்களில் மட்டும் மழை நீர் தேங்கியுள்ளது. ஒரு மணி நேரத்தில் அங்கும் தண்ணீர் இல்லாமல் சரி செய்யப்படும். பிஎம்சி பள்ளி முன்பு உள்ள சாலை கடந்த முறை மழை நீரில் தத்தளித்தது. இந்த முறை அங்கு எதுவும் தண்ணீர் இல்லை அதிக மழை பெய்தால் ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் கூடுதலாக எடுக்கப்படும். மழைநீர் முழுவதும் சரி செய்யப்பட்டு விடும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழைநீரை அப்புறப்படுத்துவது பெரும் சவாலாகவே இருந்தது. தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் ஆகியோர் உத்தரவின்பேரில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 10 வருட அதிமுக ஆட்சியில் எதுவும் செய்யவில்லை. மழை பெய்தால் 45 நாள் தண்ணீர் தேங்கி இருக்கும். முத்தம்மாள் காலனி ரஹ்மத்து நகர், மடத்தூர், தனசேகர் நகர் ஆகிய பகுதிகளில் 30 வருடமாக தண்ணீரில் பொதுமக்கள் தத்தளித்தார்கள். தற்போது எங்கும் மழைநீர் இல்லை எந்த இடத்திலும் தண்ணீர் தேங்காத நிலையை உருவாக்கியுள்ளோம். பொதுமக்கள் பயமில்லாமல் இருக்கலாம். 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்தாலும் தண்ணீர் தேங்காது. இன்று பெய்த கனமழையால் சில பகுதிகளில் தேங்கிய மழைநீரும் 3 மணி நேரத்தில் சரிசெய்யப்பட்டது. நகர ஆரம்ப சுகாதார நிலையம் 12 உள்ளது அங்கு டாக்டர்கள் பணியில் உள்ளனர். நாளை முதல் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது என்று மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கூறினார்.

உடன் ஆணையர் ப்ரியங்கா, மாநகராட்சி சுகாதாரக் குழு தலைவர் சுரேஷ்குமார் மற்றும் உடன் இருந்தனர்.

Previous Post

தீபாவளியையொட்டி தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் உறுப்பினர்களுக்கு 26 வகையான பொருட்கள் வழங்கப்பட்டது.

Next Post

தூத்துக்குடியில் எம்ஜிஆர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை

Next Post
தூத்துக்குடியில் எம்ஜிஆர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை

தூத்துக்குடியில் எம்ஜிஆர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In