தூத்துக்குடி, ஜன, 24
நாலுமாவடியில் மாநில அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான ரெடீமர்ஸ் கோப்பை மின்னொளி கபடி போட்டியை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி. லாசரஸ் தொடங்கி வைத்தார்.
நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் விளையாட்டுத்துறை மற்றும் தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் 8ம் ஆண்டு “ரெடீமர்ஸ்” கோப்பைக்கான மாநில அளவிலான தமிழர் திருநாள் மின்னொளி கபடி போட்டி நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதனை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி. லாசரஸ் தலைமை வகித்து போட்டியை தொடங்கி வைத்தார்.
இதில் ஏரல் தாசில்தார் செல்வகுமார் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடி கழக செயலாளர் கிறிஸ்டோபர் ராஜன், தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி மண்டல மேலாளர் கவுதமன், நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப்பள்ளி செயலாளர் நவநீதன், தலைமை ஆசிரியர் திருநீலகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இப்போட்டிகளில் தமிழகத்தின் தலைச்சிறந்த கல்லூரிகளைச் சேர்ந்த 14 ஆண்கள் கபடி அணிகளும், 8 பெண்கள் கபடி அணிகளும் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இப்போட்டிகள் அனைத்தும் சர்வதேச தரத்திலான “மேட்” தளத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்று 23 ந் தேதி வியாழக்கிழமை இறுதிப் போட்டி நடந்தது வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரமும், ரெடீமர்ஸ் சுழற்கோப்பையும், 2ம் பரிசாக ரூ.30 ஆயிரமும், 3 மற்றும் 4ம் பரிசாக தலா ரூ.20 ஆயிரமும் வழங்கப்படுகிறது. சிறந்த ஆட்டக்காரர்களுக்கு 6 சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகிறது. குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் 35 பார்வையாளர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகிறது.
இப்போட்டிகளுக்கான ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவன பொதுமேலாளர் செல்வக்குமார் தலைமையில் இயேசு விடுவிக்கிறார் விளையாட்டுத்துறை ஒருங்கிணைப்பாளர்கள் மணத்தி கணேசன், எட்வின், இயேசு விடுவிக்கிறார் மக்கள் தொடர்பு அலுவலர் சாந்தகுமார் மற்றும் ஜெபக்குழுவினர் சிறப்பாக செய்துள்ளனர்.

