• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கொடைக்கானல் காவல் நிலையத்தில் பொங்கல் விழா கோலாகலம் : தமிழர் பாரம்பரிய உடை அணிந்து கொண்டாடிய காவலர்களின் அசத்தல் நிகழ்ச்சி!!

policeseithitv by policeseithitv
January 14, 2025
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கொடைக்கானல் காவல் நிலையத்தில் பொங்கல் விழா கோலாகலம் : தமிழர் பாரம்பரிய உடை அணிந்து கொண்டாடிய  காவலர்களின் அசத்தல் நிகழ்ச்சி!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
  1. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல்

காவல் நிலையத்தில் பாரம்பரிய உடை அணிந்து, பானையில் புத்தரிசி இட்டு தமிழர் திருநாளாம் பொங்கலை கொண்டாடி போலீஸார் மகிழ்ந்தனர்.

தைப்பொங்கல் திருநாளன்று புத்தாடை அணிந்து தங்களது வீடுகளின் முன் புதுப் பானையில் புத்தரிசியிட்டு பொங்கல் பொங்கி வரும் போது பொங்கலோ பொங்கல் என குலவையிட்டு சப்தமிட்டு கொண்டாடுவது தமிழர்களின் பாரம்பரியம். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல்

காவல் நிலையத்தில் இன்று பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

காவலர்கள் தங்களது வழக்கமான காக்கி சீருடையை அணியாமல் கொண்டாட முடிவு செய்தனர். தங்களது வீடுகளில் கொண்டாடுவது போல் பாரம்பரிய முறையில் ஆண் போலீஸார் வேட்டி, சட்டை அணிந்தும், பெண் போலீஸார் சேலை அணிந்தும் கலந்து கொண்டனர். ஆண்கள் வெள்ளை நிற சட்டையும், வெள்ளை நிற வேட்டியும் அணிந்திருந்தனர். காவல்நிலைய வளாகத்தில் காவலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து காவல் நிலைய வாசலில் மிக பிரம்மாண்டமாக கோலமிட்டு புதுப்பானையில் பொங்கலிட்டு

பொங்கி வரும் போது பொங்கலோ பொங்கல் என குலவையிட்டு சப்தமிட்டு கொண்டாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

இந்த சிறப்பு மிக்க நிகழ்ச்சியை கொடைக்கானல் காவல் ஆய்வாளர், பாஸ்கர், காவல் உதவி ஆய்வாளர்கள் முத்துக்குமார், கார்த்திக் ஆகியோர் கொடைக்கானல் காவல் நிலையத்தில் பணியாற்றும் ஆண்,பெண் காவலர்களோடு இணைந்து சிறப்பாக ஏற்பாடுகள் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் கொடைக்கானல் டிஎஸ்பி மதுமதி

சேலை அணிந்து வருகை புரிந்தார் பின்னர்

புதுப்பானையில் அரிசி போட்டு பொங்கலிட்டார். கொடைக்கானல் காவல் நிலையத்தில், டிஎஸ்பி , மதுமதி, இன்ஸ்பெக்டர் பாஸ்கர், சப் இன்ஸ்பெக்டர், முத்துக்குமார், கார்த்திக், மற்றும் காவல் நிலையத்தில் பணியாற்றும் அனைத்து பெண் காவலர்கள் ஆண் காவலர்கள் அனைவரும் தமிழ் பாரம்பரிய உடை அணிந்து பொங்கலிட்டு கொண்டாடியது மிகவும் அசத்தலான நிகழ்ச்சியாக காணப்பட்டது…

 

செய்தி தொகுப்பு

கோடை ஆனந்த்

நாகேந்திரன்.

Previous Post

தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கோலாகல கொண்டாட்டம்..

Next Post

தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் பாரம்பரிய உடை அணிந்து, பானையில் அரிசி இட்டு தமிழர் திருநாளாம் பொங்கலை கொண்டாடி போலீஸார் மகிழ்ந்தனர்.

Next Post
தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் பாரம்பரிய உடை அணிந்து, பானையில் அரிசி இட்டு தமிழர் திருநாளாம் பொங்கலை கொண்டாடி போலீஸார் மகிழ்ந்தனர்.

தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் பாரம்பரிய உடை அணிந்து, பானையில் அரிசி இட்டு தமிழர் திருநாளாம் பொங்கலை கொண்டாடி போலீஸார் மகிழ்ந்தனர்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In