தூத்துக்குடி, ஜன, 4
வீரமங்கை வேலுநாச்சியாரின் 295வது பிறந்த நாள் விழா முன்னிட்டு நேற்று
தமிழக வெற்றிக் கழகம் தூத்துக்குடி மாநகர சார்பில்
இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.


இந்தியாவின் முதல் விடுதலைப் பெண் போராளி எனப் போற்றப்படும் வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
ஆங்கிலேயருக்கு எதிராக வாளேந்திப் போராடியவர் வேலு நாச்சியார். வேலுநாச்சியார் பிறந்த நாளான நேற்று வேலு நாச்சியாரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி உள்ளார் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய். அதுபோல் தமிழக முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தைச் சார்ந்தவர்கள்
வேலுநாச்சியார் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி
பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்.
அதன்படி
தூத்துக்குடி மாநகர தமிழக வெற்றிக் கழகம் சார்பில்
போல்பேட்டை பகுதியில் வீரமங்கை வேலு நாச்சியாரின் திருவுருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்த சிறப்புமிக்க நிகழ்ச்சி ஏற்பாட்டை
தமிழக வெற்றிக் கழகம் சார்ந்த
போராளி மணிராஜ் சிறப்பாக செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகர நிர்வாகியும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான G.ஆனந்தகுமார், மகளிரணி k. சுகந்தி,
M இக்னேஷியஸ், J.A.C. ராஜா, பெனி, கார்த்திக், கண்ணன், சகரியா, செல்வக்குமார் K.கௌசல்யா, அபர்ணா கிங்ஸ்டன் , மற்றும் இளைஞரணியைச் சேர்ந்த சரவணராஜ், முருகன், S.R.K.சுந்தர், அருண்குமார், தங்கராஜ், கணேஷ் ராஜ், கௌதம், ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

