• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தமிழகத்தில் யாரும் செய்யாத தேர்தல் வியூகம் !! அதிமுக வேட்பாளர் சின்னப்பன் மக்கள் மனதை கவர அசத்தல் பிளான்!

policeseithitv by policeseithitv
March 20, 2021
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தமிழகத்தில் யாரும் செய்யாத தேர்தல் வியூகம் !! அதிமுக வேட்பாளர் சின்னப்பன் மக்கள் மனதை கவர அசத்தல் பிளான்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிடும் தற்பொழுதைய சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக வேட்பாளருமான சின்னப்பன் திருமண அழைப்பிதழ் போன்று தேர்தல் அழைப்பிதழ் அச்சடித்து, அதனை வெற்றிலை, பாக்கு வைத்து தனக்கு வாக்களிக்கும் படி பொது மக்களிடம் நூதன தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

தமிழக சட்டமன்றத்திற்கு ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் முடிந்து தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலில் பொது மக்களை கவர்ந்து தங்களுக்கு வாக்கு கிடைக்கும் வகையில் வேட்பாளர்கள் பல்வேறு யுக்திகளை செய்து வருகின்றனர்.

இருசக்கர வாகனங்களில் செல்வது, தேநீர் கடையில் பொது மக்களுக்கு டீ போட்டு தருவது, முதியவர்களின் கால்களில் விழுந்து வாக்கு கேட்பது, சில வேட்பாளர்கள் கண்ணீர் விட்டு கதறி பொது மக்களின் உள்ளங்களில் இடம் பிடிக்க முயல்வது என பல வழிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக வேட்பாளருமான சின்னப்பன் திருமண அழைப்பிதழ் போன்று தேர்தல் அழைப்பிதழ் அச்சிட்டு வெற்றிலை, பாக்கு வைத்து வழங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டு அசத்தி வருகின்றார்.

விளாத்திகுளம் தொகுதியில் 2006ம் ஆண்டு மற்றும் 2019ம் ஆண்டு இடைத்தேர்தல் ஆகியவற்றில் வெற்றி பெற்று தற்பொழுது 3வது முறையாக களம் காண்கின்றார். 15 ஆம் தேதி வேட்புமனுவினை தாக்கல் செய்த கையோடு கிராமம் கிராமாக தனது தேர்தல் பிரச்சாரத்தினை மேற்கொண்டு வருகின்றார்.

இரு முறை எம்.எல்.ஏவாக இருந்த போது செய்த பணிகளை குறித்து எடுத்துரைத்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் நிலையில்,  எம்.எல்.ஏ சின்னப்பன் திருமண அழைப்பிதழ் போன்று அச்சிடப்பட்ட தேர்தல் அழைப்பிதழை வெத்தலை, பாக்குவுடன் பொது மக்களுக்கு வழங்கி தனக்கு வாக்கு அளிக்க வலியுறுத்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அந்த தேர்தல் அழைப்பிதழில், திருமண அழைப்பிதழில் குறிப்பிடுவது போன்று தேர்தல் நாள் ஆங்கிலம் மற்றும் தமிழ் மாதத்திலும், வாக்குபதிவு நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கமாக தாய், தந்தை பெயர் போடும் இடத்தில் முதல்வர், துணை முதல்வர், பிரதமர் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பெயர்கள் என அச்சிடப்பட்டு தனக்கு வாக்கு அளிக்கும்படி கேட்டுள்ளார்.

 

Previous Post

காரைக்குடி தொகுதியில் 9 பேர் வேட்புமனு தாக்கல் தள்ளுபடி

Next Post

பள்ளிகளுக்கு மார்ச் 22 முதல் 9,10,11-ம் வகுப்புகளுக்கு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு

Next Post
பள்ளிகளுக்கு மார்ச் 22 முதல் 9,10,11-ம் வகுப்புகளுக்கு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு

பள்ளிகளுக்கு மார்ச் 22 முதல் 9,10,11-ம் வகுப்புகளுக்கு விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In