தூத்துக்குடி
மாநில பொறியாளர் அணி துணைச்செயலாளராக தூத்துக்குடி அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளாா். இதனையடுத்து போல்பேட்டையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அப்போது அமைச்சர் கூறுகையில் 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தோ்தலில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான தளபதியாளர் ஸ்டாலின் 200 தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளாா். அந்த வெற்றியை பெறுவதற்கு கழகத்தில் உள்ள 23அணிகளும் பணியாற்றுவதற்கு கடமைபட்டுள்ளனர். அதனடிப்படையில் பொறியாளா் அணியும் தமிழகம் முழுவதும் தங்களது பங்களிப்பை முழுமையாக செலுத்தி அரசின் திட்டங்களையும் கட்சியின் கொள்கைகளையும் மற்றவா்களுக்கு எடுத்துக்கூறி அதை வாக்குவங்கியாக மாற்றி திமுக அரசுக்கு துணை நின்று வடக்கு மாவட்டத்திலுள்ள 3 தொகுதிகள் வெற்றிக்கும் பணியாற்ற வேண்டும். என்று கூறினார்.
மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர்கள் ஆபிரகாம், சின்னத்துரை, ஜாபா், கணேஷ்குமாா், மாநகர பொறியாளர் அணி அமைப்பாளர் ரூபன், உள்பட பலர் உடனிருந்தனர்.

