தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள சிறிய கிராமமான நாலுமாவடியை தலைமை இடமாகக் கொண்டு உலகம் எங்கும் உள்ள மக்களுக்கு நற்போதனைகள் அறிவித்து நல்வழிப்படுத்தி பிரார்த்தனைகள் ஏறெடுக்கும் சமூக சேவை நிறுவனமான இயேசு விடுவிக்கிறார் ஊழிய ஸ்தாபனத்தின் மூலம் வருடம் தோறும் ஏழை எளிய மக்கள், திருநங்கைகள், விவசாயிகள், தாய் தகப்பனை இழந்தோர் பிள்ளைகள், ஏழை எளிய மாணவர்கள், உள்ளிட்ட பலதரப்பட்ட மக்களுக்கும், ஏரி குளங்கள் தூர்வாரி கொடுத்தல், ஆலயங்கள் கட்டுதல் போன்ற பல்வேறு உதவிகள் செய்வது வழக்கம்
இதன்படி இந்த வருடம் கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதை முன்னிட்டு நாலுமாவடியை சுற்றியுள்ள சுற்றுவட்டார பகுதி ஏழை எளிய மக்கள் சுமார் 7000 நபர்களுக்கும் மற்றும் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி போன்ற பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுமார் 13,000 நபர்கள் என மொத்தம் 20 ஆயிரம் நபர்களுக்கு இன்று இலவச வேட்டி சேலை மற்றும் இனிப்புகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது
இந்த நிகழ்ச்சி குறித்து கூறிய சகோதரர் மோகன் சி லாசரஸ் அவர்கள் இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் அவதரித்து இருந்த நாட்களில் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்பவராக சுற்றித்திரிந்தார் அவரது போதனைகளும் கோட்பாடுகளும் உதவி செய்ய வேண்டும் என்பதாக தான் இருந்தது எங்களுக்கும் நன்மை செய்யுங்கள் என்பதாகத்தான் அறிவுரை கூறியுள்ளார் எனவே அதன்படியே நாங்களும் ஒவ்வொரு வருடமும் இவ்வாறாக ஏழை எளிய மக்களுக்கு செய்து வருகிறோம்
ஒவ்வொரு கிறிஸ்தவரும் கிறிஸ்மஸ் தினத்தில் ஏதாவது அருகில் வசிக்கும் உங்களுக்கு தெரிந்த எளியவர் ஒரு நபருக்காவது புத்தாடைகள், எடுத்துக் கொடுத்து அவர்களை சந்தோஷ படுத்த வேண்டும் என்பதாகவும் தெரிவித்தார்

இந்த உதவி அனைத்தும் ஜாதி மத வேறுபாடு இன்றி எந்த ஒரு மதப் பிரச்சாரமும் இன்றி இந்த உதவிகள் வழங்கப்படுகிறது என்பதாகவும் அவர் தெரிவித்தார் இந்த உதவிகளை சகோதரர் மோகன் சி லாசரஸ் மற்றும் அவரது மனைவி ஜாய்ஸ் லாசரஸ் ஆகியோர் தனித்தனியாக விரைவாக வந்திருந்த அனைவரும் பரிசு பொருட்களை வழங்கினர் இலவச பரிசு பொருட்களை பெற்று பெற்றுக்கொண்ட மக்கள் மகிழ்ச்சியுடன் திரும்பி சென்றனர்
இந்த நிகழ்வின்போது திருநங்கைகள் மற்றும் காது கேளாதோர் சங்கத்தினர் இந்த உதவிகளை செய்து வரும் மோகன் சி லாசரஸ்க்கு சால்வைகள் அணிவித்து கௌரவித்தனர்

