தூத்துக்குடி
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து சட்டமன்ற தேர்தலுக்கான ஓருங்கிணைப்பு குழுவை முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துள்ளார். அந்த குழுவில் மாநில இளைஞர் அணி செயலாளரும் துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின், அமைச்சர்கள் நேரு, வேலு, தங்கம் தென்னரசு, திமுக அமைப்பு செயலாளர் பாரதி, ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் பார்வையாளர்களின் பொறுப்பாளர்கள் பட்டியலை திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் அறிவித்துள்ளார். அதன்படி பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக மாநில நெசவாளர் அணி துணைச்செயலாளர் வசந்தம் ஜெயக்குமார் நியமணம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் திமுக முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கேஎன் நேரு மகனும் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான அருண்நேரு பிறந்தநாளை யொட்டி திருச்சியிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தொிவித்து உறுதியளிக்கையில்
“திமுக தலைமைக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் உறுதுணையாக இருந்து கழகப்பணியை நல்லமுறையில் செய்திட வேண்டும். தலைமை அறிவிக்கும் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொண்டு கட்சியின் கொள்கைகளையும் நல்லாட்சியில் நடைபெறும் மக்கள் நலத்திட்டங்களையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து திமுகவிற்கு வாக்கு வங்கியை அதிகரிக்க பணியாற்றுவேன். ஏற்கனவே தலைவர் கூறிய படி 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். என்ற இலக்கை தலைவர் நிர்ணயித்துள்ளார். அதற்கு வலுசேர்க்கும் வகையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் எந்த கட்சிக்கும் வாய்ப்பளிக்காமல் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி முழுமையாக வெற்றி பெற்றதை போல் 234 தொகுதிகளிலும் முழுமையான வெற்றியை பெறுவதற்கு களப்பணியாற்றினேன் அதே போல் 2026 ல் சட்டமன்ற தேர்தலில் பாளை தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளரை வெற்றி பெற செய்து எதிர்த்துபோட்டியிடுபவரை டெபாசிட் இழக்க செய்வேன். அதற்கான பணிகளை முழுமையாக கடமை உணர்வோடு பணியாற்றுவேன். என்று தொிவித்தாா்.

