தூத்துக்குடி
அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் அதிமுக உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகாிக்கும் வகையில் உறுப்பினர் சேர்க்கையும் பழைய உறுப்பினா்களுக்கு புதுப்பித்தல் அதிமுக உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கும் நிகழ்வை சென்னையில் தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களில் வழங்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி டூவிபுரத்திலுள்ள அலுவலகத்தில் மாநில வா்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சித.செல்லப்பாண்டியன் உறுப்பினர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிற்கிணங்க இரண்டாம் கட்டமாக அடையாள அட்டை வழங்கி கூறுகையில் அதிமுகவை உருவாக்கிய நிறுவனத்தலைவர் எம்.ஜி.ஆா் அவரது வழியில் ஜெயலலிதா கட்சியை வழிநடத்தி சென்ற நிலையில் 3ம் தலைமுறையாக எடப்பாடியார் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின் கட்சியில் உறுப்பினர் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. அதே போல் புதிய உறுப்பினர்களும் சேர்க்கப்பட்டுள்ளன. ஓவ்வொருவரும் தங்களது பகுதியில் உள்ள பொதுமக்களை தொடர்பு கொண்டு அதிமுகவில் உறுப்பினராக சோ்க்கவேண்டும். அதே போல் நம்முடைய குடும்ப உறுப்பினா்களையும் இதில் இணைக்க வேண்டும். ஜெயலலிதா மறைவிற்கு பின் சிறப்பான ஆட்சியை எடப்பாடியார் எல்லோருக்கும் நன்மை அடையும் வகையில் பணியாற்றினார்.
2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சி அமைவதற்கு எல்லோரும் ஓற்றுமையாக உழைக்க வேண்டும். பணியாற்ற கூடிய ஓவ்வொருவருக்கும் ஆட்சி அமைந்த பின் பொறுப்புகள் தேடி வரும். என்று பேசினார்.
மாவட்ட முன்னாள் மீனவரணி தலைவர் டெலஸ்பா், இணைச்செயலாளர் ஜோசப், முன்னாள் வட்டச்செயலாளர் முருகேசன், முன்னாள் கூட்டுறவு வங்கி இயக்குநர் சிவசுப்பிரமணியன், மகளிர் அணி சாய்சுதா, ஆகியோருக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் பொன்ராஜ், முன்னாள் தொகுதி செயலாளர் புகழும் பெருமாள், முன்னாள் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின்பாண்டியன், முன்னாள் கவுன்சிலர் செல்லப்பா, சிறுபான்மைபிாிவு அசன், பிரபாகரன், கிழக்கு பகுதி ஜெ பேரவை செயலாளர் அண்டோ, உடனிருந்தனர்.

