• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் 132 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல்  5 பேர் கைது : மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் அதிரடி!!

policeseithitv by policeseithitv
October 17, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் 132 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல்   5 பேர் கைது : மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் அதிரடி!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

 

தூத்துக்குடி, ஆக்,17

 

 

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்னர். 132 கிலோ புகையிலை பொருட்கள், கார், பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

 

தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக  ஆல்பர்ட் ஜான் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை வஸ்துகளை முழுமையாக ஒழிக்க தனிப்படை அமைத்து பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில், நகர உதவி காவல் கண்காணிப்பாளர் டாக்டர் மதன் வழிகாட்டுதலின் பேரில், வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் நிலைய உதவி ஆய்வாளர் சிவகுமார், சுப்புராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கணேஷ் புகையிலை பாக்கெட்டை கையில் வைத்திருந்த சிறுவனை அழைத்து விசாரித்தனர்.

விசாரணையில் பெங்களுரில் இருந்து பார்சல் சர்வீஸ் மூலம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்த பூபால்ராயர்புரம் 5வது தெரு செபஸ்தியன் மகன் ராஜா (42), தாளமுத்துநகர், சமீர்வியாஸ் நகர் மரிய இன்னாசி மகன் சுரேஷ் (40), பூபால்ராயர்புரம் 4வது தெரு பாலகிருஷ்ணன் மகன் விஜயகுமார் (26), கோவில்பிள்ளை விளை ஜான் ஜேசுவா எபனேசர் (32), ஆரோக்கியபுரம் ஐயர்விளை பால்துரை மகன் சுந்தர்ராஜ் (42) ஆகிய 5பேரை போலீசார் கைதுசெய்தனர். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி ஆல்பர்ட் ஜான் கூறுகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா , போன்ற போதை பொருட்கள் இல்லாத மாவட்டமாக திகழ்வதற்காக இது போன்று பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் தொடரும் என்றும்,மேலும் பள்ளிகள் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உணவு பாதுகாப்புதுறையினருடன் இணைந்து காவல்துறையினர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைப்பது, அபராதம் விதிப்பது மற்றும் வங்கி கணக்குகள் முடக்கம் போன்ற நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டார்.

சிறப்பாக பணியாற்றிய வடபாகம் போலீசாரை எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.

Previous Post

60 வார்டு பகுதிகளிலும் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் அடைப்புகள் இருந்தால் உடனடியாக தகவல் தொிவிக்க மாமன்ற உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன் – மேயர் ஜெகன் பொியசாமி

Next Post

அதிமுக 53-வது ஆண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

Next Post
அதிமுக 53-வது ஆண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

அதிமுக 53-வது ஆண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In