• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

திருநெல்வேலி காவல் சரகத்தின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் காவல் துறைத் துணைத் தலைவர் பா.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. 

policeseithitv by policeseithitv
October 15, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
திருநெல்வேலி காவல் சரகத்தின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் காவல் துறைத் துணைத் தலைவர் பா.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திருநெல்வேலி காவல் சரகத்தின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் காவல் துறைத் துணைத் தலைவர் பா.மூர்த்தி தலைமையில் இன்று (15.10.2024) திருநெல்வேலி காவல் சரக அலுவலகத்தில் நடைபெற்றது.

 

அதில் திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் நேரடியாகவும், அம்மாவட்டங்களைச் சேர்ந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களும், துணைக் காவல் கண்காணிப்பாளர்களும் கானொலி வாயிலாகவும் கலந்து கொண்டனர்.

 

இக்கலந்தாய்வு கூட்டத்தில் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனை சம்மந்தப்பட்ட வழக்குகள், சொத்து சம்மந்தப்பட்ட வழக்குகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கொடுங்குற்ற வழக்குகள், வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகள் ஆகியவற்றை ஆய்வு செய்து, புலன் விசாரணை நிலுவையில் உள்ள வழக்குகளில் நிர்ணயிக்கப்பட்ட கால வரம்பிற்குள் இறுதி அறிக்கை தயார் செய்யவும், வழக்கினை விரைவாக நீதிமன்ற கோப்பிற்கு எடுத்து நீதிமன்ற விசாரணையை துரிதமாக நடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டன. மேலும், சரித்திர பதிவேடு உள்ள நபர்களையும், பிரச்சனைக்குரிய நபர்களையும் கண்காணித்து சட்டம் ஒழுங்கினை சீராக பேணி பாதுகாத்திட அறிவுரைகள் வழங்கப்பட்டன.

 

மேலும், இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறவிருக்கும் தேவர் குரு பூஜை, சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் மருது சகோதரர்கள் நினைவு தினம் ஆகியவற்ைைற முன்னிட்டு மாவட்டங்களில் செய்யப்படவிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு, சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாத வகையில் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டன.

 

திருநெல்வேலி சரகத்திற்குட்பட்ட மாவட்டங்களில் சென்ற மாதம் சிறப்பாக காவல் பணிபுரிந்த காவல் அலுவலர்கள், காவல் ஆளிநர்கள் உட்பட 48 பேரைப் பாராட்டி அவர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வுகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஏ.சுந்தரவதனம், (கன்னியாகுமாரி), ஆல்பர்ட் ஜான், (தூத்துக்குடி), வி.ஆர். ஸ்ரீனிவாசன், (தென்காசி), சிலம்பரசன், (திருநெல்வேலி), ஆகியோர் கலந்து கொண்டனர்.

Previous Post

திமுக ஆட்சிதான் இந்துக்களுக்கு பொற்காலம் தூத்துக்குடி சண்முகபுரம் கோவில் தசரா விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

Next Post

60 வார்டு பகுதிகளிலும் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் அடைப்புகள் இருந்தால் உடனடியாக தகவல் தொிவிக்க மாமன்ற உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன் – மேயர் ஜெகன் பொியசாமி

Next Post
60 வார்டு பகுதிகளிலும் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் அடைப்புகள் இருந்தால் உடனடியாக தகவல் தொிவிக்க மாமன்ற உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன் – மேயர் ஜெகன் பொியசாமி

60 வார்டு பகுதிகளிலும் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் அடைப்புகள் இருந்தால் உடனடியாக தகவல் தொிவிக்க மாமன்ற உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன் - மேயர் ஜெகன் பொியசாமி

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In