தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட சின்னதம்பி நகாில் உள்ள பொன்மாடசாமி பேச்சியம்மன் திருக்கோவில் கொடை விழாவையொட்டி கடந்த 26ம் தேதி கால்நட்டு விழா நடைபெற்று தினசரி பூஜைகளுடன் 8ம் நாள் மதிய கொடை நடைபெற்று பொதுமக்கள் கலந்து கொண்ட சமபந்தி அன்னதான விருந்தை தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமார் தொடங்கி வைத்து உணவருந்தினார்.
விழாவில் தர்மகர்த்தா தங்கராஜா, தெற்கு மாவட்ட திமுக மாணவரணி துணைச்செயலாளரும் ஊராட்சி மன்ற உறுப்பினருமான தங்கமாாிமுத்து, ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, கிளைச்செயலாளர் உலகநாதன், மற்றும் கௌதம், உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

