தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் 442வது தூய பனிமய மாதா பேராலய திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் லட்சுமிபதி முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன், உதவி காவல் கண்காணிப்பாளர் கேழ்கர் சுப்ரமணிய பால்சந்தரா, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் பிரபு, தூய பனிமய மாதா பேராலய அருள்தந்தை ஸ்டார்வின் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

