தூத்துக்குடி, ஜூன்,30.
கலைஞர் கனவு இல்லம் மற்றும் ஊரக குடியிருப்புகள் பழுது நீக்கம் திட்டத்தில் பயன்பெற 30/06/24 ஆம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார்.
குடிசை இல்லாத தமிழகத்தை உருவாக்கும் விதமாக “கலைஞர் கனவு இல்லம்” எனும் திட்டம் தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்திற்கு அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி குடிசையில் வசிக்கும் மக்களுக்கு புதிதாக வீடு கட்டி தரும் பொருட்டு 2024-25-ஆம் நிதியாண்டு முதல் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மேலும் பல்வேறு அரசுத் திட்டங்களின் கீழ் 2000-2001-ஆம் ஆண்டிற்கு முன்னர் கட்டப்பட்டுள்ள வீடுகளில் சீரமைக்க வேண்டியுள்ள வீடுகளை கொண்ட தகுதியுள்ள பயனாளிகளுக்கு வீட்டு பழுதின் அடிப்படையில் சீரமைத்து தரும் பொருட்டு ஊரக குடியிருப்புகள் பழுது நீக்கம் திட்டம் 2024-25- ஆம் ஆண்டிற்கு செயல்படுத்தப்படுகிறது.
எனவே, “கலைஞர் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் வீடுகட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள தகுதி வாய்ந்த பயனாளிகள் பட்டியல் மற்றும் ஊரக குடியிருப்புகள் பழுது நீக்கம் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த வீடுகளைக் கொண்ட பயனாளிகள் பட்டியல் ஆகியவற்றை ஒப்புதல் பெற 30.06.2024 அன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்படவுள்ளது. என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூ ரணி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய பணி உதவியாளர் முத்துராமன் முன்னிலை வகித்தார். இந்த சிறப்பு கூட்டத்தில் கிராம மக்கள்
பெரும்பாலானோர் பங்கேற்று
கலைஞர் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் வீடுகட்ட அனுமதி கேட்டு பயனாளிகள் சுமார் 110 பேர் மனுக்கள் அளித்தனர். இந்தக் கூட்டத்தின் போது ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்
மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் தூத்துக்குடி யூனியன் கவுன்சிலர் அந்தோணி தனுஷ் பாலன், ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார், திமுக இளைஞரணி கௌதம், உட்பட்ட ஏராளமான பங்கேற்றனர். தாளமுத்து நகர் போலீசார்கள் இந்த கூட்டத்தின் போது பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

