தூத்துக்குடி
தமிழக சட்டசபை பட்ெஜட் கூட்டத்தொடாில் தமிழ்வளா்ச்சி மற்றும் செய்திதுறை அமைச்சர் வௌ்ளக்கோவில் சாமிநாதன் தமிழ்நாட்டில் முதன் முதலில் அச்சு இயந்திரத்தை நிறுவி தமிழுக்குப் பெருமை சேர்த்த சீகன் பால்கு க்கு சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் இரு தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.
இதனையடுத்து சென்னை தலைமை செயலகத்தில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை தமிழ் சுவிசேஷ லுத்ரன் திருச்சபையின் பிஷப் டேனியல் ஜெயராஜ், ஜீவராஜ், குருக்கள் சார்லஸ், எட்வின் சார்லஸ், செல்லதுரை, சாலமன், பாரதி, ஜஸ்டின், சத்தியமூர்த்தி, பிரசன்னா, மெர்சிபாய், என்வால் துரை, ஈஸ்டர் ராஜ், இவான் ஜிலுக்கல் லுத்ரன் திருச்சபையின் ஸ்டான்லி ஜோசப், ஆண்ட்ரூஸ் வாசுதேவன், அன்பழகன், கிரைஸ்ட் லுத்ரன் திருச்சபையின் டாக்டர் ஸ்டான்லி ஜோஸ், உபதேசியார் நலவாரிய துணைத் தலைவர் போதகர் பால் தயாநிதி, உறுப்பினர் நிக்சன், தென்னிந்திய திருச்சபையின் ஹேமில்டன் மற்றும் சாம்சன், ஜான்சன் மான்சிங், ஜான் சிம்சன் ஆகியோர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தமிழ்வளா்ச்சி மற்றும் செய்திதுறை அமைச்சர் வௌ்ளக்கோவில் சாமிநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ், நிவேதா முருகன், உடனிருந்தனர்.

