தூத்துக்குடி,, ஜூன் 7,
தூத்துக்குடியில் முள்புதர்களுக்குள் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி முள்ளக்காடு பகுதி கிராம ஊரணி ஒத்த வீடு பகுதியில், ஒரு தனியார் கம்பெனியின் பின்புறத்தில் முள்புதர்களுக்குள் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக விஏஓ ராஜேஷ் கண்ணா தெர்மல் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் பேரில் காவல் ஆய்வாளர் சோபா ஜென்சி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தவருக்கு சுமார் 50 வயது இருக்கும் என தெரிகிறது. கருப்பு நிற டவுசர், வெள்ள வேஷ்டி அவர் அணிந்திருந்தார். ஆனால், அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. இது சம்பந்தமாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கண்ட அங்கமச்ச அடையாளங்கள்
கொண்ட அந்த நபர் பற்றி தகவல் தெரிந்தவர்கள்
காவல் ஆய்வாளர், தெர்மல் நகர் காவல் நிலையம், தூத்துக்குடி தொலைபேசி எண்-0461-
2352721என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும் என காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

