• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி 5வது வார்டு பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் மக்கள் குறைகேட்பு 

policeseithitv by policeseithitv
May 13, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி 5வது வார்டு பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் மக்கள் குறைகேட்பு 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பெய்த எதிர்பாராத கன மழையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன அப்பணியில் முழுமையாக அமைச்சர் , அரசு துறை அதிகாாிகள் ஈடுபட்டு, புதிய கால்வாய் சேதமடைந்த சாலைகள் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் பல்வேறு பகுதியில் புதிய பேவர் பிளாக் சாலைகள் தார்சாலைகள் கழிவுநீர் கால்வாய்கள் மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என்று பல்வேறு பகுதி பொதுமக்கள் ஏற்கனவே கோாிக்கை வைத்திருந்தனர். தேர்தல் நடைமுறைக்கு பின்னர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.

இந்நிலையில் 5வது வாா்டுக்குட்பட்ட கிருஷ்ணராஜபுரம் பகுதி மக்கள் அமைச்சரை சந்தித்து மனு அளித்திருந்தனர். இதனையடுத்து அப்பகுதிக்குட்பட்ட பொதுமக்களை சந்தித்து தங்களது குறைகள் குறித்து கேட்டறிந்தார். மக்களுடன் கலந்துரையாடலில் பேசும் போது திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் இந்த பகுதிக்கு புதிய திட்டங்கள் குறிப்பாக சாலை வசதி, கழிவு நீர் கால்வாய் வசதி, செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் எந்த பணியுமே நடைபெறாமல் இருந்ததை நீங்கள் அறிவீர்கள் மக்களுக்காக தொடா்ந்து பணியாற்றும் கட்சி திமுக தான். திமுக ஆட்சிதான் உங்களுக்கு பொற்காலம் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலினும் மக்கள் நலன் தான் முக்கியம் என்று கருதி பணியாற்றுகிறார். அவரது வழியில் உங்களது சில கோாிக்கைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக முழுமையாக செய்து கொடுப்பேன், என்று உத்தரவாதம் அளித்தார்.

மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ஜெயக்குமாா், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமாா், கவுன்சிலர் அந்தோணி பிரகாஷ் மார்ஷலின், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் மணி, உள்பட பலர் உடனிருந்தனர்.

Previous Post

மாப்பிள்ளையூரணி  கிராம ஊராட்சி பகுதிகள் தூய்மையாகயிருக்க சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாத தூய்மை காவலர்களின் சீர்மிகு பணி : உபகரணங்கள் வழங்கி பாராட்டிய மாப்பிள்ளையூரணி பஞ். தலைவர் சரவணக்குமார்.

Next Post

தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் வழிப்பறி கும்பல் அட்டகாசம்: இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவாரா?? எஸ்.பி.பாலாஜி சரவணன்!! பொதுமக்கள் எதிர்பார்ப்பு..

Next Post
தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் வழிப்பறி கும்பல் அட்டகாசம்: இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவாரா?? எஸ்.பி.பாலாஜி சரவணன்!! பொதுமக்கள் எதிர்பார்ப்பு..

தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் வழிப்பறி கும்பல் அட்டகாசம்: இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவாரா?? எஸ்.பி.பாலாஜி சரவணன்!! பொதுமக்கள் எதிர்பார்ப்பு..

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In