தூத்துக்குடி, மார்ச்,30.
அகில இந்திய யாதவர் பாதுகாப்பு பேரவை நிறுவனர் -தலைவர் டாக்டர் கேப்டன் ராஜன் யாதவ் இன்று தூத்துக்குடி புதுக்கோட்டையி ல் நமது கட்சி அலுவலகத்தில் வைத்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினார். அப்போது அவர் தெரிவித்ததாவது
2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தேர்தல் புறக்கணிப்பு செய்ய முடிவு செய்துள்ளதாகவும் இந்த அதிரடி முடிவெடுப்பதற்கு காரணம்
அகில இந்திய யாதவர் பாதுகாப்பு பேரவை சார்பில்
பல ஆண்டுகளாக அறிவுறுத்தியும் மத்திய மாநில அரசுகள்
ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாததினாலும், மேலும் யாதவர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் நாடாளுமன்றத்திற்கு சீட் வழங்காதது, கனிம வளங்களை அண்டை மாநிலம் மற்றும் அண்டை நாட்டிற்கு கடத்துவதை தடுக்காதது, மலை மாடுகளுக்கு மேய்ச்சல் நிலங்களை ஒதுக்காதது,
27 சதவீதம் இட ஒதுக்கீடு முழுமையாக வழங்காதது, கீதாரிகளின் வாழ்வாதாரத்தை கண்டுகொள்ளாதது, உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து யாதவர் சமுதாய மக்களும், யாதவ அமைப்புகளான அகில இந்திய யாதவர் பாதுகாப்பு பேரவை ஆகியவை தொடர்ந்து திராவிடக் கட்சிகளையும் தேசிய கட்சிகளையும் வலியுறுத்தியும் வருகிறது, ஆனாலும் மேற்கண்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய, மாநில அரசு அதனை செவி சாய்க்காமல் இருந்து வருவதாலும்
யாதவர்களை
புறக்கணிக்கின்ற திராவிட கட்சிகளையும், தேசிய கட்சிகளையும் கண்டித்து,
வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தேர்தல் புறக்கணிப்பு செய்ய முடிவு செய்துள்ளதாக
அகில இந்திய யாதவர் பாதுகாப்பு பேரவை நிறுவனத் தலைவர் கேப்டன் ராஜன் யாதவ் தெரிவித்தார். மேலும் அடுத்த வாரம் தேனியில் அகில இந்திய யாதவர் பாதுகாப்பு பேரவை பொதுக்குழு கூட்டம் நடத்தி
தேர்தல் புறக்கணிப்பு விஷயமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து யாதவ சமுதாய மக்களும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்வது உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் அதிரடியாக எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது அகில இந்திய யாதவர் பாதுகாப்பு பேரவை தேனி மாவட்ட இளைஞரணி தலைவர் முத்து ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தி தொகுப்பு கண்ணன்…

