பாளை,மார்ச்,26
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் கராத்தே செல்வின் நினைவிடத்தில் பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தினர்.
காமராஜர் ஆதித்தனார் கழக நிறுவன தலைவர் கராத்தே செல்வின் நாடார் 27-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி
நெல்லை புதிய பஸ் நிலையம் அருகில் கல்லறை தோட்டத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு தரப்பினரும் மாலை அணிவித்தும், மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினர் அதன்படி பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழ்நாடு நாடார் பேரவை நிறுவனர் என் ஆர் தனபாலன்
ஆணைக்கிணங்க பெருந்தலைவர் மக்கள் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ் பி மாரியப்பன் தலைமையில் இளைஞர்கள் பெரும் திரளானோர் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்வின் போது மாவட்ட பொருளாளர் மில்லை தேவராஜ் , தமிழ்நாடு நாடார் பேரவை மாவட்ட தலைவர், ரவி சேகர், இளைஞர் அணி ரஞ்சித், அவைத் தலைவர் தருவைகுளம் சண்முகவேல், உள்ளிட்ட ஏராளமான இளைஞர்கள்
தூத்துக்குடி மாவட்ட செயலாளர்
எஸ்.பி. மாரியப்பன் தலைமையில் அஞ்சலி செலுத்தினர்.

