தூத்துக்குடி
கலைஞர் மகளிர் உாிமைத்தொகை குறித்து சர்ச்சையாக பேசி பெண்களை இழிவுப்படுத்திய குஷ்புவை கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கண்டனம் தொிவித்திருந்தார். திமுக மகளிர் அணியின் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு நடந்த போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் குஷ்பு உருவப்படத்தை துடைப்பத்தால் அடித்தனர். பின்னர் உருவபடத்தை எாித்து தனது கண்டனங்களை தொிவித்தனர்.
இதில் வடக்கு மாவட்ட திமுக மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, தலைவர் பார்வதி, பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூாிதங்கம், மண்டலத்தலைவர் கலைச்செல்வி, மாநகர துணைச்செயலாளர் பிரமிளா, கவுன்சிலர்கள் நாகேஸ்வாி, ஜான்சிராணி, ஜெயசீலி, மாநகர மகளிர் தொண்டரணி துைண அமைப்பாளர் பெல்லா, மகளிர் அணி துணை அமைப்பாளர் சண்முகவடிவு, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அருணாதேவி, மாவட்ட தகவல் ெதாழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், துணை அமைப்பாளர் அந்தோணி கண்ணன், மகளிர் அணி இந்திரா, சந்தனமாாி, திமுக வட்ட செயலாளர் கதிரேசன், உள்பட பலர் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

