தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று 12.3.24 திறந்து வைத்து பார்வையிட்டனர்.

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர் பிரம்மசக்தி தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன் கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி செல்வி.ரா.ஐஸ்வர்யா ,மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன்
தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் பிரபு, திமுக மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன் மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா கிழக்கு மண்டல தலைவர் கலைச்செல்வி ஆகியோர் உடன் உள்ளனர். திமுக இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், உமரி சங்கர், கிருபாகர், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஜேஸ்பர் பிரபாகர், துரைமணி ஆல்பர்ட் செய்தி மக்கள் தொடர்பு நவீன் பாண்டியன் உட்பட பல கலந்து கொண்டனர்.

