• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாட்டின் வளர்ச்சியில் பெண்கள் பங்கு முக்கியம் வகிக்கிறது. மகளிர் தின விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் பேசினார்.

policeseithitv by policeseithitv
March 5, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாட்டின் வளர்ச்சியில் பெண்கள் பங்கு முக்கியம் வகிக்கிறது. மகளிர் தின விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் பேசினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி மகளிர் கூட்டமைப்பு சார்பில் பெரிய செல்வநகர் இ சேவை மைய மைதானத்தில் மகளிர் தின விழா நடைபெற்றது.

 

விழாவிற்கு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் திறன் மற்றும் வேலைவாய்ப்பு செயல் அலுவலர் ராதா தலைமை வகித்தார். தமிழ்நாடு கடலோர நிலைத்த வாழ்வாதார சங்கம் மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு அலுவலர் ஜானி பேட்ாிக்ரூபன், மகளிர் கூட்டமைப்பு தலைவர் அந்தோணிபிரேமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

விழாவில் மகளிர்க்கு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் சிறந்த முறையில் பணியாற்றிய மகளிர் சுய உதவி குழுக்களுக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்புக் சீருடை வழங்கி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளரும் ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமார் பேசுகையில் “அனைத்து மகளிர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நமது மாவட்டதிற்கு பணியாற்றும் கனிமொழி எம்.பி, முதலமைச்சரின் தங்கை மகளிர்க்கென்று பல்வேறு சலுகைகளை வாரி வழங்கிய அரசு திமுக தான், 1989ல் மகளிர் சுய உதவிகுழு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் ஆரம்பிக்கப்பட்டு வங்கி கடன்கள் வழங்கப்பட்டன. இதை 2006ல் மேலும் விரிவுப்படுத்தி சிறந்த முறையில் பணியாற்றும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மணிமேகலை விருது வழங்கப்பட்டது. இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி கிடைக்கிறது. என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு கட்டங்களில் பேசியதுண்டு. தற்போது கூடுதலாக வங்கிக்கடன் வழங்கப்படுகிறது. இந்த ஊராட்சி பகுதியில் சுமார் 100 குழுக்கள் வரை செயல்பட்டு வருகின்றன. உங்களுக்கு தேவையான பல்வேறு உதவிகளை இந்த அரசு மட்டுமின்றி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், வழிகாட்டுதலோடு அரசின் திட்டங்களும் கிடைக்கப் பெறுகிறது. மாப்பிள்ளையூரணி ஊராட்சியை பொறுத்தவரை எல்லா பகுதியிலும் உள்ள மக்கள் நன்மைகள் அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் பணியாற்றுகிறோம். இனி வரும் காலங்களிலும் உங்கள் நலன் தான் முக்கியம் என்று நாங்கள் பணியாற்றுவோம். நாட்டின் வளர்ச்சியில் மகளிர்களின் பங்கு முக்கியம் வகிக்கிறது. வரும் காலங்களிலும் எல்லோரும் இந்த அரசுக்கும் மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கும் துணை நிற்க வேண்டும் என்று பேசினார்.”

 

விழாவில் இந்தியன் வங்கி மேலாளர் டிக்சன் நீதிராஜ், மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் சுபா, யூனியன் வங்கி உதவி மேலாளர் தமிழ்செல்வி, அஞ்சல் துறை அலுவலர் முத்துமாாி, ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ்பாலன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, பெலிக்ஸ், ஜேசுராஜா, மகளிர் சுய உதவிக்குழு செயற்குழு உறுப்பினர் ஆரோக்கியமேரி உள்பட பல்வேறு மகளிர் சுய உதவிக்குழுக்கள் பலர் கலந்து கொண்டனர். பல்வேறு பேச்சுப்போட்டிகள் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

 

விழாவிற்கான ஏற்பாடுகளை மகளிர் கூட்டமைப்பு செயலாளர் லூர்து பாக்கியம், பொருளாளர் ஜானகி, இணைச்செயலாளர் லட்சுமி, செயற்குழு உறுப்பினர்கள் அந்ேதாணி ரோஸ்ஸீன், மல்லிகா, பியூலா, பாக்கியமணி, முத்துக்கனி, மோி ரோஸ், அம்புரோஸ், மோி, ஆரோக்கிய மோி, முத்துக்கனி, அங்காளஈஸ்வாி, அசுந்தாமோி, குறுஞ்ஜோதி, இசக்கியம்மாள், மாியஸ்டினா லின்சி, மாிய கலையரசி, ஆகியோர் செய்திருந்தனர்.

Previous Post

தூத்துக்குடி டூவிபுரத்தில் தின்னை பிரச்சாரம் அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

Next Post

மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு கோடையிலும் சீரான குடிநீர்  விநியோகம் நடைபெற வேண்டும்: குடிநீர் வினியோக பணியாளர்களுக்கு பஞ். தலைவர் சரவணகுமார் அதிரடி உத்தரவு!!

Next Post
மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு கோடையிலும் சீரான குடிநீர்   விநியோகம் நடைபெற வேண்டும்: குடிநீர் வினியோக பணியாளர்களுக்கு பஞ். தலைவர் சரவணகுமார் அதிரடி உத்தரவு!!

மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு கோடையிலும் சீரான குடிநீர்  விநியோகம் நடைபெற வேண்டும்: குடிநீர் வினியோக பணியாளர்களுக்கு பஞ். தலைவர் சரவணகுமார் அதிரடி உத்தரவு!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In