தூத்துக்குடி.
இந்தியாவின் 17வது பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனையொட்டி அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும் எதிர்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் அதிமுக தலைமை கழகத்தில் விருப்ப மனு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதன்படி பல்வேறு அதிமுக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் பலர் விருப்பமனு அளித்து வருகின்றனர்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், எதிர்கட்சித்தலைவருமான எடப்பாடி போட்டியிட வேண்டும் என்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் சார்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தெற்கு மாவட்ட அதிமுக மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ் அதிமுக சிறுபாண்மையினர் நலப்பிரிவு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அப்துல் ரஹீம்-யிடம் விருப்பமனு வழங்கினார்.
இந்நிகழ்வில், மாவட்ட செயலாளரும், எம்எல்ஏ-வுமான அருண்மொழி தேவன், தெற்கு மாவட்ட வழக்கறிஞரணி துணை செயலாளர் சரவணப்பெருமாள், மாவட்ட செயலாளரின் நேர்முக உதவியாளர் சாம்ராஜ் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

