தூத்துக்குடி.
இந்தியாவின் 17வது பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனையொட்டி அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும் எதிர்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் அதிமுக தலைமை கழகத்தில் விருப்ப மனு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதன்படி பல்வேறு அதிமுக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் பலர் விருப்பமனு அளித்து வருகின்றனர்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினரும், அதிமுக மாநில வழக்கறிஞர்கள் பிரிவு துணைச் செயலாளருமான மைக்கேல் ஸ்டேனிஸ் பிரபு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், கழக செய்தி தொடர்பாளருமான ஜெயக்குமாரிடம் விருப்பமனு வழங்கினார்.
இந்நிகழ்வில், முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின், ரமணா, தலைமை நிலைய அலுவலக செயலாளர் மகாலிங்கம் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

