தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியபட்டினம் விஸ்டம் பப்ளிக் பள்ளியில் சோபுகாய் கோஜூரியோ கராத்தே பள்ளியின் 24வது தென் மண்டல அளவிலான கராத்தே போட்டிகள் கடந்த 25ம் தேதி நடைபெற்றது.
இப்போட்டியில் சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மதுரை, சிவகங்கை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் இருந்து பங்கேற்றனர். இப்போட்டியின் தலைமை நடுவராக கராத்தே பள்ளியின் இந்திய தலைமை பயிற்சியாளரும் தொழில்நுட்ப இயக்குனருமான டாக்டர் சுரேஷ் குமார் செயல்பட்டார். இதில் தூத்துக்குடி ஹோலி கிராஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியை சேர்ந்த மாணவர்கள் தூத்துக்குடி மாவட்ட கராத்தே செயலாளர் சென்சாய் முத்துராஜா தலைமையில் பங்கேற்றனர். கட்டா பிரிவில் 5 தங்க பதக்கமும், 2 வெள்ளி பதக்கமும் 5 வெண்கல பதக்கமும் வென்று சாதனை படைத்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை ஹோலி கிராஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி தலைமை ஆசிரியர் சகோதரி ரொசாரியோ, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினார்கள்.

