தூத்துக்குடி.
இந்தியாவின் 17வது பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனையொட்டி அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும் எதிர்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் அதிமுக தலைமை கழகத்தில் விருப்ப மனு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதன்படி பல்வேறு அதிமுக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் பலர் விருப்பமனு அளித்து வருகின்றனர்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாநில அதிமுக ஜெயலலிதா பேரவை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான உதயகுமார் எம்எல்ஏ, முன்னாள் எம்.பி.யும் மாவட்ட செயலாளருமான பாலகங்கா ஆகியோரிடம் விருப்பமனு வழங்கினார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக அணி மாவட்ட செயலாளர் துரைசிங், வட்ட செயலாளர் மில்லை ராஜா, வக்கீல் ராஜாராம், திருமண்டல பெருமன்ற உறுப்பினர் பிரபாகர், மாரியப்பன், அருண்குமார் உள்பட மாநில மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

