• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா : அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை

policeseithitv by policeseithitv
February 29, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மத மோதல்களை உருவாக்கி குளிர்காய்வதைப் போல் நாங்கள் செயல்படுவது இல்லை. நாங்கள் இந்தியாவை நேசிக்கிறோம். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி

திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது என்று தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் பி.கீதாஜீவன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் கழக கொடியேற்றுதல், இனிப்புகள் வழங்குதல், மோதிரம் வழங்குதல், முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உணவு வழங்குதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், பொதுக்கூட்டங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

மார்ச் 1ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழகங்களுக்கு உட்பட்ட கிளை மற்றும் வார்டு கழகங்கள் தோறும் கழகத்தின் இருவண்ணக் கொடியை புதிதாக ஏற்றியும், இனிப்புகள் வழங்கியும், கழக கொள்கை விளக்கப் பாடல்கள் ஒலிபரப்பியும் உற்சாகமாக கொண்டாடப்பட வேண்டும்.

மதியம் 12.00 மணிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து முதியோர், ஆதரவற்றோர் இல்லங்கள், மாற்றுதிறனாளிகள் இல்லங்களுக்கு மதியம் அறுசுவை உணவு வழங்கப்படுகிறது.

மார்ச் 2ம் தேதி சனிக்கிழமை காலை 9.00 மணி அளவில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழக தலைவர் பிறந்த தினமான மார்ச் 1ம் தேதியன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சியும், அன்றைய தினம் மாலை 4.00 மணிக்கு கோவில்பட்டி நகர தி.மு.க சார்பில் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

அதுபோல அன்றைய தினம் மாலை 3.00 மணிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் எட்டையபுரத்தில் 100 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அன்று இரவு 7.00 மணிக்கு கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி தி.மு.க சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவர் ஏ.பி.சி.வி சண்முகம், மா.கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர், கனகராஜ் மற்றும் தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

மார்ச் 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணி அளவில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தி.மு.க மகளிரணி சார்பில் கழக தலைவர் பிறந்தநாள் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் விளாத்திகுளம் ஜி.வி.மஹாலில் நடைபெற இருக்கிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக கழக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்பி கலந்து கொள்கிறார்கள்.

அன்றைய தினம் மாலை 6.00 மணிக்கு விளாத்திகும் சட்டமன்ற தொகுதி தி.மு.க சார்பில் திராவிட மாடல் நாயகரின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. அன்றைய தினம் இரவு 7.00 மணிக்கு தூத்துக்குடி மாநகர தி.மு.க சார்பில் திராவிட மாடல் நாயகரின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் தூத்துக்குடி சிதம்பரநகர் பேரூந்து நிறுத்தம் எதிரில் நடைபெற இருக்கிறது.

அனைத்து நிகழ்ச்சிகளையும் சம்பந்தப்பட்ட கழக நிர்வாகிகள் சிறப்பாக செய்திடவும், அனைத்து நிகழ்ச்சிகளிலும் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை, செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கிளைக்கழகம் மற்றும் வார்டு கழக செயலாளர்கள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சிமன்ற பிரதிநிதிகள் கழக தோழர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Previous Post

மத மோதல்களை உருவாக்கி குளிர்காய்வதைப் போல் நாங்கள் செயல்படுவது இல்லை. நாங்கள் இந்தியாவை நேசிக்கிறோம். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி

Next Post

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் விருப்ப மனு வழங்கினார்

Next Post
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் விருப்ப மனு வழங்கினார்

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் விருப்ப மனு வழங்கினார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In