தூத்துக்குடி.
கோவில்பட்டி ஜே.எம்.1 நீதிமன்றதில் சாத்தான்குளம் காவல்துறையால் அடித்து கொல்லப்பட்டு மகேந்திரன் இறந்துவிட்டதாக அவர் தாயார் வடிவு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் உயர்நீதி மன்ற உத்தரவுபடி சி.பி.சி.ஐ.டி போலீசார் எப்.ஐ.ஆர். 4/2020 என பதிவு செய்து கோவில்பட்டி ஜே.எம்.1 நீதிமன்றதில் சி.ஆர்.எல்.எம்.பி.1872/2024 வழக்கில் பிரிவு 164 சி.ஆர்.பி.சி இன் படி சாட்சிகள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இன்று 22.2.2024இல் மகேந்திரன் தாயார் வடிவு, சகோதரி சந்தனமாரி, சித்தி சந்திரா ஆகியோர் நீதிபதி கடற்கரை செல்வம்; முன்பு சாட்சியம் அளித்தனர்.
இதுகுறித்து சித்தி சந்திரா தெரிவித்ததாவது: எனது வீட்டிற்கு வந்திருந்த எனது அக்காளின் மகன் மகேந்திரனை அதிகாலை 2 மணிக்கு எனது வீட்டிற்குள அத்துமீறி நுழைந்த சாத்தான்குளம் போலீசார் எனது கண் முன்னே அடித்து உதைத்து, மகேந்திரன் இனி உயிரோடு வரமாட்டான், செத்தான் என நினைத்துக்கொள் என கூறி சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு இழுத்துச் சென்று, அங்கும் சட்டமுறணாக அடித்து கொடுமைப்படுத்தி பின்னர் விடுவித்துள்ளனர். போலீசார் கூறியபடியே மனித உரிமையை மதிக்காமல் சாத்தான்குளம் போலீசார் சித்ரவதை செய்து மகேந்திரன் உயிரை பறித்து விட்டனர். அப்பாவி ஏழைகளான எங்களுக்கு மகேந்திரன் கொலைக்கு நீதி வேண்டுகிறோம்.
(போட்டோ படம்: கோவில்பட்டி நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் உடன் வந்த வடிவு, சந்திரா, சந்தனமாரி ஆகியோர் சாட்சி சொல்ல வந்தபோது எடுத்த படம்)

